பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

என்பது பாடல். இந்தப் பாடல் அச்சமயம் அங்கு மாறு வேடத்தில் நகரைச் சுற்றி வந்த காவலனான நந்தியின் காதில் விழுகிறது. பாட்டின் சுவையை அறிகிறான்; தம்பியின் குரலைத் தெரிகிறான். தம்பியைக் கண்டு தழுவித் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவள் கலம்பகம் பாடியிருக்கும் விவரம் அறிந்து அப்பாடல்களைக் கேட்க விரைகின்றான். தம்பியோ அண்ணனது அளப்பரிய அன்பினை நினைந்து, 'பாட்டில் அறம் இருக்கிறது. நீ கேட்டால் இறந்து போவாய்' என்று பாட மறுக்கிறான். அரசனோ விடவில்லை. 'இப்படி அருமையான பாடல் ஒன்றைக் கேட்பதற்கே உயிரை விடலாமே. நூறு பாடலா? இதற்கு உயிரை மட்டுமா கொடுக்கலாம்,' உடல் பொருள் எல்லாவற்றையுமே கொடுக்கலாமே என்று சொல்கிறான்.

ராஜ்யத்தைத் தம்பிக்கே கொடுத்து விட்டு அரண்மனையிலிருந்து சுடுகாடுவரை நூறு பந்தல்கள் அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் நின்று ஒவ்வொரு பாட்டாகக் கேட்டு கடைசியில் நூறாவது பாட்டையும் காஷ்டத்தில் ஏறிக்கொண்டே கேட்டு உயிர் துறக்கிறான். இது உண்மையான கதையோ என்னவோ? 'நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்று சிவஞான முனிவர் பாடி விட்டார் ஆனால் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழ்ப் பாடல்களைக் கேட்பதனால் உயிரைத் துறக்க நேரிடும். என்றாலும் அப்பாடல்களைக் கேட்க நந்தி தவறமாட்டான் என்பதே இந்தக் கவிதையின் உள்ளுறை பொருள். இவனைப் போலவே இன்னொருவர் குருலினிடம் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, 'இதை நீ பிறருக்குச் சொல்லக் கூடாது சொன்னால் உன் தலை வெடித்து விடும்' என்று எச்சரித்திருந்தபோதிலும், அந்த எச்சரிக்கைபையெல்லாம் மதியாமல் தான் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, ஊரில் உள்ளவர்களை அழைத்து வைத்து மதில் மேல் ஏறி நின்று உபதேசித்தார் என்றால் அது எவ்வளவு பாராட்டுக்கு உரியது.

தாம் இன்புறுவது
உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்