பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. கொடுங்கோளூர் பகவதி

ட இந்தியாவிற்குப் போய் அங்குள்ள இமயத்தின் சிகரத்திலேயே ஏறி அன்றைய வைஸ்ராயின் வாசஸ் தலமான சிம்லாவை அடைந்தால், அங்கு கோயில் கொண்டிருக்கும் பாதாள தெய்வம் சியாமளா என்றும், அவள் பெயரே சிம்லா என்று திரிந்து வழங்குகிறதென்றும் காண்போம். அந்த சிம்லாவிற்குச் செல்லும் வழியில் உள்ள' கால்கா, காளிகா தேவியின் இருப்பிடம். இன்றைய பஞ்சாபின் தலைநகரான சண்டிகரின் காவல் தெய்வம் சண்டிகா.

நமக்குத் தெரியும் காளிகட்டமே கல்கத்தா என்று மாறியதென்று, இப்படி காளிதேவியின் வழிபாடு வட நாட்டில் மலிந்திருக்க, அந்த காளிதேவி வழிபாடே தமிழ் நாட்டிலே துர்க்கை, பிடாரி, மாரியம்மன் வழிபாடாக பரவி இருக்கிறதென்று. இந்த வழிபாடு எல்லாம் தமிழ்நாட்டிலே நடப்பதற்கு காரணமாயிருந்தவள், சிலப்பதிகாரத்து காவிய நாயகியான கண்ணகி என்றும் கூறுவர். கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் வேட்டுவர் ஊரில் உள்ள கொற்றவை கோயிலில் தங்கியிருக்கின்றனர். அப்போது அங்கு வேட்டுவர், பூசை போடத் துவங்கியிருக்கின்றனர். துர்க்கையை வணங்கும் பூசாரி ஆவேசம் வந்து ஆடத் தொடங்கியிருக்கிறான். அப்போது அவன் அங்கு வந்திருந்த கண்ணகியைப் பார்த்து,

இவளோ கொங்கச் செல்வி
குடமலையாட்டி