பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேங்கடம் முதல் குமரி வரை

இங்கு ஒரு சௌகரியம், இங்குள்ள உற்சவ மூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் கருவறையில் இருந்து மூலவர் திருவடி தரிசனத்துக்கு இடையூறு செய்ய மாட்டார். பூவராக மூர்த்தியின் வடிவு முழுவதையும் கண்ணாரக் கண்டு மகிழலாம். இம்மூர்த்தியின் சிரஸில் ஒரு தங்கக் கீரிடம் இருக்கிறது. சேவார்த்திகள் விரும்பினால் அதனை எடுத்துக் காட்டுவர். அது, கீழே விழுந்து விடாத படி ஒரு தங்கச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் காணலாம்.

இக்கோயிலில் உள்ள உற்சவர் யக்ஞ வராகர். இவர் யக்ஞவராகர் என்று பெயர் பெற்றதற்கு ஒரு வரலாறு உண்டு. நெய்வேலிக்கு அடுத்த வளையமாதேவியில் - கார்த்தியாயன மகரிஷி என்று ஒருவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகள் அம்புஜவல்லி என்ற பெயரோடு. இவளை மணக்க பூவராகன் விரும்புகிறான். அப்போது மகரிஷி பூவராகனை அவரது சுயஉருவில் வந்து மணந்து கொள்ளும்படி வேண்டுகிறார். அந்த முனிவர் நடத்திய வக்ஞத்திலிருந்து தன் சுய உருவோடு எழுந்திருக்கிறார்.

அப்படிப் பரந்தாமன் பூதேவி ஸ்ரீதேவி சகிதனாக எழுந்தவரே யக்ஞ வராகன் என்ற திருதாமத்தோடு அங்கு கருவறையை அடுத்த அந்த ராளத்தில் இருக்கிறார். அணிகளும், பணிகளும் - பட்டாடையும் அணிந்து மேனியழகு முழுவதையும் காட்டாத கோலத்திலேயே தான் அவரைத் தரிசிக்க வேணும், அவர் பக்கலிலேயே சுமார் முக்கால் அடி உயரத்தில், செப்புச்சிலை வடிவத்தில், பூவராகன் வேறே எழுந்தருளியிருக்கிறார். அச் சிறு வடிவினுக்கும் கவசம் அணிவித்து வைத்திருப்பார்கள்.

இந்த யக்ஞவராகர் எனும் உற்சவரே உற்சவ காலங்களில் உலாப் புறப்படுவார். மாசி மாதம் நடக்கும்