பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வேங்கடம் முதல் குமரி வரை

சேர்ந்தவன் உறைவிடம்
திருவல்லமே!

என்பது சம்பந்தர் தேவாரம். இன்று சார்ந்தவர் துன்பங்கள் துடைத்து இன்பங்கள் தழைக்கும் ஆற்றலோடு விளங்கும் ஒரு முனிவரும் தங்கும் தலமாக இருக்கிறது இத்திருவலம். இக்கோயில் திருப்பணி இப்போது முடிவு பெற்றிருக்கிறது. இத்திருப்பணியைச் செய்தவர்கள் பிரபல பணக்காரர்கள் அல்ல. அந்த வட்டாரத்தில் மிகசெல்வாக்கு உடையவர்களும் அல்ல.

ஓர் ஏழைப் பரதேசி, வல்லநாதர் என்னும் வில்வாரண்யராம் சித் புருஷராக வாழ்கிறார். பலரது நோயைத் தீர்க்கிறார். அதன் மூலம் பைசா பைசாவாக பணம் திரட்டி, ஒரு பெரிய திருப்பணியையே முடித்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு சிறப்புடையதாகிறது. வல்லநாதருக்குத் தெரியாதா தனக்கு வேண்டியதைத் தானே தேடிக் கொள்ள. ஆம், எவ்வளவுதான் அவரை விட்டு விலகி ஓடினாலும் நம்மைத் தொடர்ந்து வந்து அருளுகிறவர் ஆயிற்றே!

நினையாத நெஞ்சை நினைப்பித்து, கல்லாததைக் கற்பித்து, காணாததைக் காட்டி, சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து வந்து அடியவர்களை ஆட்கொள்ளுபவராக அல்லவா விளங்குகிறார்? வசதி உடையவர்கள் எல்லாம் சென்று வணங்கி வல்ல நாதர் அருள் பெறுமாறு வேண்டிக்கொண்டு நான் நின்று கொள்கிறேன்.