பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. குடந்தை கீழ்க்கோட்டம்

னது அமெரிக்க நண்பர் ஒருவர். அவருக்கு நம் தமிழ் நாட்டுக் கலைகளின் மீது ஆர்வம் அதிகம். அவரும் நம் கோவில்களில் காணும் இன்பவடிவங்களின் அழகில் மெய் மறப்பார். அவை என்ன என்ன அடிப்படைத் தத்துவங்களை விளக்குகின்றன என்று நான் சொல்லி விளக்கினால் அதிசயித்து நிற்பார்.

நான்கைந்து வருஷம் U.S.I.S.ல் பணியாற்றி விட்டு அமெரிக்கா திரும்புகின்ற அவசரத்தில் என் வீட்டிற்கு வந்தார். தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த காலம். “மிஸ்டர் தொண்டைமான். நான் இன்னும் சில தினங்களில் என் சொந்த நாடு திரும்புகின்றேன். அப்படித் திரும்புமுன் தமிழ் நாட்டில் இன்பச் சிறப்புகளை எல்லாம் விளக்கும் ஒரு கோயிலைப் பார்த்து விட வேண்டும். அக்கோயிலும் அங்குள்ள இன்ப வடிவங்களும் என் நினைவில் என்றும் பசுமையாக இருக்க வேணும். உம்மைப் பற்றி என் மனைவியிடம் பிரமாதமாகச் சொல்லியிருக்கிறேன். என்னைப் போல அவளுக்கும் ஆசை. எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா? என்று மிக்க பரிவோடு பேசினார். தஞ்சைப் பெரிய கோயிலக் காட்டுகிறதா. காட்டினால் தக்ஷணமேரு என்னும் விமானத்தையும், பெருவுடையார் வடிவத்தையும் தானே காட்ட வேண்டும். இல்லை கோனேரிராஜபுரம் நடராஜனைக் காட்டலாமா? ஆக்கூர் ஆயிரத்து ஒருவரைக்

வே.மு.கு.வ-3