பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேங்கடம் முதல் குமரி வரை

இருந்த சேக்கிழார் திருத்தொண்டர் பெரிய புராணத்தைப் பாடி இருக்கிறார்.

அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த குலோத்துங்கள், அவரை யானை மீதேற்றி தானும் உடன் இருந்து அவருக்குச் சாமரை வீசிக் கௌரவித்திருக்கிறான். பக்தியும் கலையும் நிரம்பியவனாக இருந்ததனால் அல்லவா இப்படி ஒரு கலைக்கோயிலும் காவியக் கோவிலும் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறான் அவன். இக்கோயில் இன்று தருமபுரம் ஆதீன கர்த்தர் அவர்கள் மேற்பார்வையில் இருக்கிறது. திருப்பணி சிறப்பாக நடந்து குடமுழுக்கும் நடக்கிறது. ஆதீன கர்த்தர் அவர்களின் கலைப்பணியையும் பக்திக் கனிவையும் நினைத்து நான் தலை தாழ்த்தி நின்றேன்.