பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேங்கடம் முதல் குமரி வரை

பாட்டினால் உன்னை
என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்

என்று பாடினானே மங்கை மன்னன், அது ஞாபகத்திற்கு வராமலா போகும்! இந்தத் தேன் கூட்டுக்கு, அதாவது இந்தக் கூட்டில் வாழும் முனிவர்களுக்கு, இன்று பூசை நடக்கிறது. திருக்கண்ண மங்கை செல்வோர் இதைக் கண்டு தொழாமல் இருப்பதில்லை. நாமும் செல்லலாம். அங்குள்ள கலைச் செல்வங்களை எல்லாம் கண்டு தொழலாம், முனிவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தேனைக் கூடக் கொஞ்சம் உண்டு மகிழலாம். இங்கு நடக்கும் உற்சவம், வைகுண்ட ஏகாதசி. வைகுண்டநாதன் பக்தவத்சலனாகக் கோயில் கொண்டிருக்கின்ற இடமல்லவா, வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் எல்லாம் செல்லலாம்.