பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேங்கடம் முதல் குமரி வரை

படம் அச்சாகியும் விட்டது நாமும் நல்ல படம் என்று சொல்லி வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டு வீட்டில் தொங்கவிட்டுக் கொண்டோம்.

ஆனால் இப்போது படத்தைப் பாருங்கள். வீடு தோறுந்தான் இருக்குமே. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, என்ன நீங்கள் சொன்னீர்களே அந்தக் கற்பனை ஒன்றும் இந்தப் படத்தைப் பார்த்ததில் என்னுள்ளத்தில் உதயமாகவில்லையே என்றால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

இந்தக் கற்பனையின் அற்புத உருவைக் காண வேண்டுமானால், நேரே பேரணி ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் வாங்குங்கள். அங்கிருந்து நேரே மேற்கே பார்த்து நாலு ஐந்து மைல் நடந்து போங்கள். இடையில் வரும் சிற்றூர்களில் வேண்டுமானால், எண்ணாயிரம் என்கிற ஊர் எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எண்ணாயிரம் என்ற ஊருக்குச் சென்றதும் அங்குள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குப் போங்கள். வழியில் யாராவது மறித்து ஊர்க்கதை, ஸ்தலத்தின் பெருமையை எல்லாம் எடுத்துரைக்க முயன்றால், 'அதெல்லாம் அப்புறம்' என்று சொல்லி நிறுத்தி விடுங்கள்.

கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மூலஸ்தானத்திற்கே போங்கள். போகும்போது, கோயில் உள்ளேயே நெருஞ்சிமுள் உங்கள் காலைப் பதம் பார்த்தால் என்னைத் திட்டாதீர்கள். இதற்கெல்லாம் தக்க பலன்தான் கைமேல் கிட்டப் போகிறதே. சுதையில் உருவாகியிருக்கும் மூலவர் நரசிங்கப் பெருமாளையெல்லாங்கூடப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.

கர்ப்பக்கிருகத்திற்கு அடுத்த கட்டிலே அந்தராளத்தில் வடக்கே பார்க்க நின்றுகொண்டு உங்கள் டார்ச் லைட்டை