பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேங்கடம் முதல் குமரி வரை

கொண்டிருக்கிறார். நல்ல கருங்கல்லில் உருவாகியிருக்கிறார். உலோகத்தில் வார்க்கப்பட்டவரோ என்று சொல்லும்படி நல்ல மழமழப்புடன் இருக்கிறார். அவரே காட்சி கொடுக்கிறார் பக்கத்தில். பருத்திக் கொல்லை நாச்சியார் அளித்த விருந்து காரணமாகவோ என்னவோ உடல் தளதள என்றிருக்கிறது.

நானறிந்த மட்டில் வராக மூர்த்தியும் உடையவரும் இவ்வளவு அழகாய் வேறிடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்விரு சிற்பங்களைக் காண்பதற்காகவே இந்த ஊருக்கு ஒரு பயணம் கட்டலாம். கட்டுங்களேன்!