பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. அருக்கன் குளம் - காட்டுராமர் கோயில்

தாயுரை கொண்டு தாதை ஏவ கானாளப் புறப்படுகின்றான் கமலக்கண்ணனான ராமன். உடன் செல்கிறார்கள் தம்பி லக்ஷ்மணனும் மனைவி சீதையும். மூவரும் பஞ்சவடியில் தங்கியிருந்தபோது இலங்கை வேந்தனான ராவணன் வஞ்சத்தால் மூவரும் பிரிகிறார்கள், அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன்.

அப்படிச் செல்லும் ராவணனை எதிர்த்துப் பறவைக்கரசனான சடாயு போரிடுகிறான். தன் இறகுகளை ராவணன் வெட்டி விட்டதால் கீழே விழுந்து கிடக்கிறான். சீதையைத் தேடிப் புறப்பட்ட ராமலக்ஷ்மணர்களைச் சந்தித்து, சீதையைச் சிறை எடுத்துச் சென்ற அரக்கன் போன வழியைச் சொல்லிவிட்டு, சடாயு உயிர் துறக்கிறான். சடாயுவைத் தன் தந்தையாகவே மதித்த ராமன், தன் தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன்களை எல்லாம் செய்கிறான். இதனை ஆதிகவி வான்மீகி சொல்கிறார். அவர் வழி நின்று அமரகாவியம் எழுதிய கவிச் சக்கரவர்த்தி கம்பனும் சொல்கிறான்.

ஏந்தினன் இருகை தாளினால்
ஏற்றினன் ஈமம் தன் மேல்
சாந்தொடு மலரும் நீரும்
சொரிந்தனன் தலையின் சரல்
கரந்து எரிகாலமூட்டி
கடன் மூறை கடவா வண்ணம்