இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
வேட்டை நாய்
நண்பன் பொய் சொல்ல மாட்டான். சொன்ன சொல்லை நிச்சயம் காப்பாற்றுவான்.”
“காப்பாற்றுவானா! எப்படிக் காப்பாற்ற முடியும்? அவன் ஊர் என்ன சமீபத்திலா இருக்கிறது; ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்; கடலைக் கடந்து செல்ல வேண்டும்; பெரிய காடுகளை எல்லாம் கடந்து செல்ல வேண்டும். இவற்றை எல்லாம் கடந்து செல்லுகிறவன் திரும்பி வரவா போகிறான்?”