இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
வேட்டை நாய்
“என்ன, உண்மையாகவா!” என்று இருவரும் அரசனைப் பார்த்துக் கேட்டார்கள
“ஆம், உண்மைதான்!” என்றான் அரசன்.
உடனே, இருவரும் அரசனுக்கு வணக்கம் செலுத்தினர். ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டுக்கொண்டு வெளியேறினர்.
அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான், அரசன். “ஆகா! இவர்கள் இருவரும் அபூர்வ நண்பர்களே!” என்று அப்போது அவன் வாய் முணுமுணுத்தது.