பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

வேண்டும் விடுதலை


 
தமிழர்க்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும் கிடைத்துவிடக்
கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை!


டந்த 16.7.1988 செவ்வாயன்று கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஓராண்டுக்காலம் என்ற தலைப்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அங்கு இந்திய உயர் ஆணையர் தீட்சித் பேசும்பொழுது, "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கி விட்டுத், தமிழீழப் போராளிகளிடம் இலங்கை நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இப்படியொரு நிலைமை உருவாகிவிடக் கூடாதென்பதே இந்தியாவின் நோக்கம். அதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது என்று, இந்தியாவின் கரவான உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் பேசுகையில் இலங்கைத் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளைப் பலவகையிலும் வெளிப்படுத்தித் தெளிவாகப் பேசியுள்ளார்.

"இலங்கை மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற சிக்கலுக்குக் காலப்போக்கில் தீர்வு ஏற்படும். அதற்காக விடுதலைப் புலிகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தவிர்த்து விட்டு, இலங்கை விடுதலைப் புலிகளுடன் தானே புதிய பேச்சுகளைத் தொடங்கினால் தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று தீட்சித் இலங்கையை எச்சரித்துள்ளார்.