"அவ பேர் என்ன சொன்னே?" "மஞ்சு... ரொம்ப நல்ல பெண். என்மீது உசிரையே வச்சிருக்கா... எனக்குத்தான் இந்தக் கூத்தாடி வாழ்க்கை பிடிக்கலே. எந்த நேரமும் மனசு வேதம் வேதம்’னு அடிச்சுக்கிறது. தாயைப் பிரிஞ்ச கன்னுக்குட்டி மாதிரி தவிச்சுண்டிருக்கேன், தினமும் ராத்திரி வேளைல சுவாமி வீதிவலம் போறப்போ பிராமணாள் கூட்டமா கணிர் னு வேதம் சொல்லிண்டு போறதைப் பாக்கறப்போ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. ஐயோ! இந்த உத்தமமான வேதத்தை விட்டுட்டு அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை நடத்தறமேன் னு எனக்கு நானே ஏங்கிப் போறேன். 'சிக்கிரமே உன்னைப் பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்"னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி, பிரமை பிடிச்ச மாதிரி மனசு ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா, அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே.' 80கியம்ைபிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள். தற்செயலாய் மாமா அங்கே வந்தார். யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!' என்று கேட்டார். என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மா மா! மூர்த்தின்னு பேரு... இவன்ைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்" என்றான். - "அப்டியா? சாப்டாச்சா ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க. கும்போணம் கொடிக்கா வெத்திலை' என்றார் 拉ft叠#”。 - "பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?" 106
பக்கம்:வேத வித்து.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
