பூவை. எஸ். ஆறுமுகம் 101
குரல் கேட்டதும், கிருஷ்ணன் இருக்கையைப் பிரிக் தான.
“ஏங்க எடுபிடிப் பையன் இல்லையா?”
“இருக்கிருன் . விடுவரை போயிருக்கிருன்!”
காரைக்குடி பஸ் காதைத் துளைத்தெடுத் து.
கிருஷ்ணனே சைக்கிளுக்குக் காற்றடித்தான்.
“பொடிசு இல்லீங்களா? சுருக்குப் பை கொடுத்திட்டுப் போயிருந்தேன்,’ என்று விவரம் தந்து இன்னொருவர் வந்து கின்றார். -
கடையின் உள்ளே கட்டை ஒன்றில் மாட்டியிருந்த
பையை எடுத்து நீட்டினன் கிருஷ்ணன். பணத்தை எண் னிப் பார்த்துக் கொள்ளுங்கள்!”
‘நீங்க ஒண்ணு. சாதியை எனக்கு ஒரு வருஷமா கவே தெரியுமே. பையன் பொடிசானுலும் கையும் வாயும் ரொம்ப சுத்தம்!” -
கிருஷ்ணனுக்கும் பெருமை பிடிபடவில்லை, தன் ஊழி யனை ஒருவர் பாராட்டுகிருரென்று.
கிருஷ்ணனிடம் சாரதி எடுபிடிப் பையனுக வேலைக்கு வந்து சேர்ந்து இந்த இரண்டு வருஷங்களில் அவனப் பற்றி ஒருவரும் குறை கூறியதில்லை. பையன் காரியத்திலும் சூரன். அவனுடைய பேச்சும் செயலும் கிருஷ்ணனக் கவர்ந்ததைப் போலவே எல்லோரையும் கவர்ந்திருந்தன.
சைக்கிள் ரிப்பேர், சாயா வாங்கி வருதல், அங்கங்கே போவது, யஜமான் வீட்டுச் செல்லப் பாப்பாவைத் தொட் டிலில் இட்டு ஆட்டுவது போன்ற வேலைகள் கிருஷ்ணனுக்கு.
ஒரிரவு.
சாரதி, ய ஜ ம | ன் வீட்டில் மிஞ்சிய’ சாப் பாட்டைச் சாப்பிட்டு முடித்து ‘எச்சில் எடுத்தானபின்,
முதலாளிக்கு வெற்றிலப் பெட்டியை எடுத்துவந்து வைத்