பக்கம்:வேனில் விழா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 133

சத்தைக் கண்டுகொண்டான். சில நாள் கழித்துத் தன் பேருக்குக் கடிதம் ஒன்று வர முத்திரையை வீரப்பன் பார்த் தான். ஊர் முத்திரை! அவசரமாக தபாலை உடைத்தான். வீரப்பனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வடிவழகி இவ்வளவு அந்தமாகவும், அழகாகவும் தனிப்படக் கடிதம் எழுதித் தனக்குப் போடுவாள் என்று அவுன் சிறிதும் எதிர்பார்த்த வனல்லவே! தன்னைப் படிக்கத் தெரியாதவள் என்ற ஒரே காரணத்துக்காகப் புறக்கணித்ததால் மனம் கொங்த அவள், வாத்தியாரம்மாவிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட விருத்தாந்தம் முழுவதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந் தாள.

பாரதியாரின் புதுமைப் பெண்’ சுவட்டில் அழகு காட்டி கிற்கும் வடிவழகியை இனிக் கைத்தலம் பற்ற வீரப் பனுக்கு என்ன தயக்கம்? தன் முன் வரவேற்புக் கூறி விரிந்து கிடக்கும் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தான். வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய லட்சியத் தம்பதிகள் பலரின் கிழல் சித்திரங்கள் அவன் கினைவில் அடங்கிச் சென்றன.

ஒரு நாள் வீரப்பனும் வடிவழகியும் இருமனம் ஒன்று சேர்’ தம்பதிகளாயினர்.

அன்று பள்ளிக்கடிடத்து வாத்தியாரம்மாவைக் கண்டு வரப் புறப்பட்டான் வீரப்பன். .

‘அம்மா, உங்கள் உதவிக்கு கான் மிகவும் கடமைப் பட்டவன். நீங்கள் மாத்திரம் அடிக்கடி வடிவைத் தூண்டி யிராவிட்டால் இவ்வளவு எளிதில் அவள் படித்துக் கொண் டிருக்கச் சாத்தியப்படுமா?’ என்று சொல்லிப் புடவை ஒன்றை அவளிடம் சமர்ப்பித்தான்.

“வீரப்பன், ஆச்சரியமாக இருக்கிறதே! கொஞ்ச கேரத்துக்கு முன்தான் உங்க வடிவு வந்து புடவை, பழங்கள் எல்லாம் கட்டாயப் படுத்திக் கொடுத்துவிட்டுப் போனது. கேட்டதற்குக் காரணம் என்ன சொன்னது பாருங்களேன், குரு தட்சினையாம்: கல்யாணப் பரிசாம். படிப்பு மட்டுமல்ல; அழகாகப் பேசவும் கற்றுக்கொண்டு விட்டது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/134&oldid=684297" இலிருந்து மீள்விக்கப்பட்டது