140 மையலும் தையலும்
அப்படின் னு இதுவரை எம்பேரில் உசிரையே வச்சிருக் கவனப் ப்ோல் நடந்ததெல்லாம் பாவனை தானே? வரட்டும்.’
சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சி நடந்தாள். அதற்குள் மாடன் ஏதோ ஒரு ஸ்திரமான தீர்மானத்திற்கு வந்தவனைப் போல ஓடிப்பேர்ய், “வஞ்சி, அதுக்குள்ளார இப்படி விரசா ஓடறியே! நாளே விடிஞ்சதும் உன் கையிலே வெறும் வெள்ளிக் காசைக் குலுங்கச் செஞ்சுட்டாச் சம்மதந்தானே? அப்புறம் கீ என் கண்ணுட்டியாறதுக்கு அட்டியில்லையே” என்று சொல்லிக் கண் சிமிட்டினன். வஞ்சியும் குறு நகையை உதிர்த்தவாறு திரும்பினுள். இரு ஜோடி விழி களின் சங்கமத்தில் அவர்களது மணவினை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது!
“ மாடா...”
அடித்தொண்டைக் குழியினின்றும் மிதந்தோடிய வார்த்தைகள் முனகலுடன் வெளிப்போங்தன. முருகு தம்பியை அலட்டினன். .
முழங்காலில் கைகளை அனைத்துக் கட்டிய வண்ண மிருந்த மாடன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு சும்மா விருந்தான், கேட்டும் கேளாதது மாதிரி. -
முருகுவும் மாடனும் உடன்பிறப்பு. விபரம் புரிந்த காள்தொட்டு அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தவன் மாடன்! முருகு சற்று முன் கோபி. கோபமிருக்கும் இடத்தில்தானே குணமுமிருக்கும்?. முருகுவுக்கு முதல்தாரம் கல்யாணம் பண்ணி அங்தப் பெண் இறந்துபோனுள். வருடங்கள் இரண்டு ஆகின்றன. இதுவரை அவன் கல்யாணத்தைப் பற்றி அக்கரை காட்டவில்லை. -
தற்சமயம் அந்தக் குடிசையில் அவர்கள் இரண்டுபேர். மட்டுமே வாசம். முருகு பாம்பு விஷத்தைப் போக்கடிப்பதிலே சூரன். அத்துடன் காட்டு வைத்தியத்திலும் அவனுக்கு நல்ல பேர் பெயரும் புகழும் அவனுக்கு கிதி, சேர்த்துத் தந்ததில் வியப்பில்லே அல்லவா? அது போக, மாடனும்,