பக்கம்:வேனில் விழா.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 மையலும் தையலும்

வைக்கக் கஞ்சியிலே விஷம் கலந்துட்டேன். அண்ணுச்சி! என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னியுங்க!”

மாடன் தேம்பினுன். முருகுவுக்குக் கொஞ்சம் தெம்பு ஊறியது. தம்பியை அனைத்துக்கொண்டு, “ தம்பி, எல்லாத்துக்கும் மேலே கடவுள் இருக்காரல்லவா ? நீ விஷமின்னு எண்ணிக் கலந்தது சும்மா மயக்க மருந்து போல. கம்ப கல்லகாலம். கடந்தது கண்ணிரோடு தொலையட்டும். அந்தப் பொண்ணைக் குறை சொல்லாதே. அது என்ன செய்யும் ? விடிஞ்சதுமே வஞ்சியைக் கண் சூலம் செஞ்சிக்கிடப் பரிசம் போட்டுடுவோமா ? அதை தோன் கேளுவேன்...’ என்றான் முருகு.

குடிசையின் மூலையிலிருந்த அகல்விளக்கின் திரியில் சுடர் எறியது; ஒளி மங்கியது. சற்றுக் கழித்து அச்சுடர் தெறித்துப் பூமியில் விழுந்தது. மறுபடியும் முன்போல அழகாக அகல்வெளிச்சம் எங்கும் பரவ ஆரம்பித்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/145&oldid=684309" இலிருந்து மீள்விக்கப்பட்டது