பக்கம்:வேனில் விழா.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 163

வைக்காம இன்னமும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். ஐயாவே, நீங்களும் ஒரு தங்கச்சியோட பிறந்தவங்க தானுங்களே. என் ஆசைத் தங்கையை என் உயிர் இருக் கிறதுக்குள்ளே காணலாமா? காணக்கட்டுமா?-” என்றான் காளி. அவன் பேச்சில் சொல்லுக்குப் புறம்பான சோக மிருந்தது; சஞ்சலமிருந்தது; ஆர்வமிருந்தது; ஆதுர மிருந்தது!

குமாரசாமி காளியை நோக்கினன். அவன் செய லிழந்த பாவையாக கின்றிருந்தான். விழிக்குழியில் புதைந்து கிடந்த கண்ணின் கருவிழிகள் அங்குமிங்கும் யாரையோ தேடியலைந்தன. அவன் தங்கையையா? “சகோ தரியை மீண்டும் பார்க்கலாமா?’ என்ற ஆசைக் கனவில் மிதந்த அவன் இமைப்பொழுது மலர்ச்சியடைந்தான். அதே கொடியில் இனி எப்படி, எங்கே அவளைக் காண இயலும்! என்ற கிலே ஏற்படவே மலர்ச்சி பெற்ற அவன் வாட்டமுற்றான்; வாடிப் போனன்.

சாலை எல்லையை மிதிக்கும் வரை இருவரும் மோன நிலையில் வழிகடந்தனர். ஊரை அடைந்தவுடன் குமார சாமி சில்லைரையை எண்ணி எட்டு அணு காளிக்குக் கொடுத்தான். காளி சிரித்தான்; பலமாகச் சிரித்துக் கொட்டினுன், ஊழிக் கூத்தில் பிரமன் உதிர்த்த பேய்ச் சிரிப்புக் கணக்கில்- அவன் சிரிப்பில் இதய அந்தரங்க எண்ணங்கள் பூராவும் அலை பாய்ந்து மேல் பூச்சாகி எதி ரொலிப்பது போன்று குமாரசாமி கினைத்துக்கொண்டான்.

‘பாவம் பைத்தியம் போல.”

குமாரசாமி இரக்கங் காட்டினன். காளி அப்படியென் ருல் பைத்தியமா? யார் சொன்னர்கள்?

‘ஐயா, காசு பணத்துக்கு என்னுங்க. உங்க மாதிரி கல்ல மனுசங்கதான் எனக்குப் பெரிசு. எனக்கு என் தங் கச்சிப் பொண்ணு கிடைக்குங்களா?’ என்று கூறி, அவன் தங்கியுள்ள வீட்டைக் கேட்டுக்கொண்டு காளி விடைபெற் றுக்கொண்டான். r.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/164&oldid=684330" இலிருந்து மீள்விக்கப்பட்டது