பூவை எஸ். ஆறுமுகம் 181
‘அன்புக்கும் தொழுகைக்கும் உரிய அத்தான் அவர் களுக்கு, அனந்த கோடி கமஸ்காரங்கள்.
உங்கள் கடிதம் கிடைத்தது. கான் பேரதிர்ச்சி அடைவேன் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் அடிக்கடி உங்கள் முன் சொல்வது மாதிரி, உங்கள் வாழ்வும் வளமும்தானே என் கனவும் குறிக்கோளுமாகும்! உங்கள் கெஞ்சில் குடிகொண்டிருக்கும் பெண் கொடுத்துவைத்தவள். அட்டியில்லை! நான் உங்கள் தாரணி. உங்கள் அன்பின் ஏவு தலுக்காகக் காத்திருக்கும் தோழிப் பெண் நான். உங்கள் ஆணதான் எனக்குக் கடமை. அதுவே எனக்குத் தேவ கட்டளை பின், கான் எப்படி அத்தான் மன அதிர்ச்சி பெற முடியும்? என்னைப் பொறுத்த மட்டிலே, தங்களது அன்புக் கதவு எப்போதும் தாழ் இடப்படாமல் இருந்தால், அதுவே என் பூஜாபலனுக அமையும். கான் இருந்து உங்கள் கல்யாணத்தை கடத்தி வைப்பேன், அத்தான்!
இப்படிக்கு, தார னி.’’
அழகேசன் கண் இமைகளைத் துடைத்துக் கொண்டு மீண்டும் படுக்கையைச் சரணடைந்தான்.
காலத்தேர் என்றாவது ஓய்வுக்காக கின்றதுண்டா?
தாரணி அக்தரங்க சுத்தியுடன் அபர்ணுவைத் தேடி வந்து, “அபர்ணு உன் அத்தான் சுந்தாம் அவர்களே கான் திருமணம் செய்து கொள்வதாய் முடிவுசெய்திருக்கிறேன்!” என்று உணர்ச்சி வசப்பட்டவளாகச் சொன்னதைக் கேட்ட அபர்ணு, “நிஜமாகஆா? ஆஹா, என் கவலைகளையெல்லாம் ஒரு கொடியில் தீர்த்து வைக்கும் தெய்வமாக மாறி விட்டாய், தாரணி!” என்று தேம்பிக் கண்ணிர் பெருக்கி ஞள்.
விவரம் தெரிந்ததும், அழகேசன் பூரித்துப் போனன். ஆம். தாரணி தெய்வமேதான். மனிதப் பிறவியின் காணக் கிடைக்காத தெய்வம் அவள் என் அர்ணுவின் மனத்