பூவை. எஸ். ஆறுமுகம் 183
பல்லிலே நாடமாட்டேன். அவங்க அவங்க மனசுக்குள்ளே அவங்க அவங்க இஷ்டப் பிரகாரம் ஒவ்வொரு முடிவு இருந்துக்கிட்டுத்தான் இருக்கும் என்னை மாலேயும் கழுத்து மாப் பார்க்க வேணும்னு, என்னுேட-எனக்குத் தெய்வமாய் துணையிருக்கிற மகிமை அவர்...சுந்தரம் அவர்களுக்குத் தான் உண்டு!”
தாரணி வெறிச்சோடிய பார்வையை வீசியவளாகத் தேம்பினுள்.
மூன்றாம் நாள்.
இரவு.
நடுகிசி.
தாரணியின் கண்ணிர்த் தாழினை விலக்கிக்கொண் டிருந்தது அந்த இடது கரம்’ அவள் கினைத்தாள்.
“...ஒர் இரகசியத்தை இனிமேல் அவருக்கு நினைவூட்ட வேண் டும். பிஞ்சுப் பிராயமதில் மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்திட்ட வேளையில், என்னுடன் “டு போட்டுக் கொண்டு பிரிந்த அவர், இனி யாவது என்னுட்ன் ராசியாகி விடுவார் அல்லவா?திெல்லைக் குவியல் களுக்கு மத்தியில் தவிக்கும் அவருக்கு இந்தப் பழங்கதை எங்கே நின்விருக்கப் போகிறது? தெய்வத் தன்மைக்கு முன்னே வலிம்ை யிழந்ததாகி விடுகின்ற இந்தப் பேதை மனத்துக்கு இதைத் தவிர வேறு ஆத்ல் இல்லவே இல்லையோ...’
நழுவி விழுந்த அந்தக் காகிதக் கிழிசல் கீழ்க்கண்ட வாசகத்தை ஒலி பரப்பிய பெருமையுடன் காற்றில் பறந்தது! -
“என் மரணத்துக்கு நானே காரணம்-சுந்தரம்.”