பக்கம்:வேனில் விழா.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 9 6 இன்று நேற்று வ்ந்த சொந்தமா ?

கண்ட கனவுக் கும் கொண்ட நினைவுக்கும் வெற்றி முத்திரை பதித்துத் திரும்பிவிட வேண்டும் என்று தங்கப்ப னும் அவனைப் பெற்ற மாதாவும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்’ வண்டியில் பயணமாஞர்கள். ஆனால், அதே துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் அவர்கள் இருவரையும் சுமந்து திரும்புகையில், இடிந்த மனக் கோட்டைகளின் துகள்கள் மாத்திரமே எஞ்சிக் கிடந்தன. கனவு ராஜ்யத்தின் நுழை வாயிலைத் தரைமட்டமாக்கிவிட்டது அந்த இனம் புரியாச் செயலுக்குப் பெயர்தான விதி? - -

அன்று புதுக்கோட்டை தனியரசாக இயங்கியது. தங்கப்பன் பிறந்தான். அவனுக்குச் சொந்த மாமன் மகள் சாந்தினி. மரகதத்தம்மாளின் உடன் பிறந்த தம்பி சோம சேகரன் திருச்சியில் வசதி"யுடன் திகழ்ந்தார். என்றாலும் தங்கப்பனின் கல்லூரிப் படிப்பு சென்னையிலேயே தொடர்க் தது; எம். ஏ. படிப்பு: பொருளாதாரப் பிரிவு, வெற்றி பெற்ற இனிப்புச் சேதியை மட்டிலுமே அவனது தந்தை அனுபவிக் கக் கொடுத்து வைத்தார். தனியார் கடத்திய கல்லூரியில் “லெக்ச்சரர்? ஆளுன் தங்கப்பன். இருநூற்றைப்பது ரூபாய்ச் சம்பளம், பாங்கில் தந்தை சேமித்துச் சென்ற பணம் பத்தாயிரம். பட்டண வாழ்வு இதுவரை அவனுக்குச் சோதனைகள் தரவில்லை; ஆளுல் இப்போது, அவனைச் சோதித்து விட்டது; ஏன், அவனே சோதனைப் பொருளா ன்ை.

மனம் ஒரு போட்டோ ஆல்பம். தானும் சாங்தினியும் பிஞ்சுப் பிராயம் தொட்டு, இதயம் தொட்டு உறவாடி மகிழ்க்த இனிய நாட்களை அவனது மனம் காமிரா'வாகிப் படமெடுத்தது. ஆனல் அதே நிகழ்ச்சிகள் இன்றைக்குப் படமெடுத்து ஆடும் பாம்புகளாகிவிட்டனவே? உம்மைப் பெருவினை'யும் ஓர் அரவமோ?

வெங்கடேச கிராமணித் தெருவில் அவ்வீட்டின் முன்னர்

சைக்கிள் ரிக்ஷா கின்றது. -

“மிஸ்டர் காகநாதன்...!” என்று குரல் கொடுத்தான். தங்கப்பன். - ... . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/197&oldid=684366" இலிருந்து மீள்விக்கப்பட்டது