பக்கம்:வேனில் விழா.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 1 99

‘தம்பி, உனக்குச் சேதி தெரியுமா?’’ ‘சொன்னுல்தானே அம்மா தெரியும்?”

அவன் பேசிய பேச்சு அவனுக்கே நகைச்சுவையாகப் பட்டது. கையில் கொணர்ந்திருந்த இனிப்புப் பொட்டலத் தைப் பிரித்து அன்னேயிடம் கொடுத்துவிட்டு முகத்தை உயர்த்தினுன் அவன்.

‘தம்பி, உன் ஜாதகமும் சாந்தினி ஜாதகமும் ரொம்ப வும் அற்புதமாப் பொருந்தியிருக்குதாம். திருச்சியிலிருந்து அந்த ஜோஸ்யர் வந்திருந்தார்; எதேச்சையாப் பார்த்தேன். புதுச் சம்பந்தம் கிடைச்சா, ஏகப்பட்ட பணம் புரட்டிக் கொள்ள வழி ஏற்படும்னு கினைச்சுத்தான் என் தம்பிஉன் மாமா இப்பிடி கம்பளே ஏமாத்தியிருக்கிருன்!... ம்! தங்கப்பா, சாந்தினிக்குக் கலியாணம் நடக்கும் அதே காளிலே உனக்கும் கல்யாணம் பண்ணி வைச்சாத்தான், என் மனசும் ஆறுதல் படும்!” என்று வேதனையும் லட்சிய உறுதியும் இழை பின்னிப் பேசினுள் மரகதத்தம்மாள்.

‘முன் வினைப்படிதானே அம்மா எல்லாம் கடக்கும்?... பணம் பணத்தைத்தானே நாடும்?... நீங்க பலகாரத்தைச் சாப்பிடுங்க அம்மா’ என்று கெஞ்சினுன் தங்கப்பன்.

‘இந்த கிமிஷத்தோட, எனக்கு ஒரு தம்பி இருக்கிற தையே மறந்துப்பிட்டேன்!” என்று கண்ணிர் பெருக்கிளுள் மரகதத்தம்மாள்.

சாங்தினியின் வதனம் அவனது இதயத்திரையில் கிழ லாடியது; தன் தந்தையின் கடைசித் தீர்ப்புப் படிக்கப் பெறும் நேரத்தில் சாக்தினியின் கண்மலர்கள் பனித்திரை ஏந்திய காட்சியை அவன் எப்படி மறப்பான்?

‘சாந்தினி, நீ பாக்கியவதி!... என்னைவிட எல்லாவகை யிலுமே உனக்கு ஏற்ற மாப்பிள்ளை மிஸ்டர் நாகநாதனே. தான்!... உன் அப்பா கல்யாணப் பத்திரிகை அனுப்பின லும், அனுப்பா விட்டாலும், என் இதயபூர்வமான வாழ்த்துக் களைத் தெரிவிக்க கேரில் ஓடி வருவேன்!...”

to:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/200&oldid=684370" இலிருந்து மீள்விக்கப்பட்டது