பக்கம்:வேனில் விழா.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஆத்தா !

களேங்து மாற்றுடை உடுத்துக்கொண்டு கையில் ரவிக்கை யுடன் உள் திண்ணையில் அமர்ந்தபோது, கந்தசாமியின் புகைப்படத்தின் நினைவு எழவே, அதை எடுத்து வந்து அழகு பார்த்தவாறு இருந்தாள். கிழற்படத்துக்குரியவனே நேரில் வந்ததும், அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வந்தவன் அவளுடைய படத்தைக் காட்டினன். ஆர்வம் துள்ள பொன்னரசி தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டி ருந்தபோது, கந்தசாமி இளமை துள்ளும் பொன்னரசியின் அழகைப் பருகிக்கொண்டிருந்தான். பருவ மலரின் நெடி மண்டைக்கு ஏறியது. அவளுடைய கண்களுடன் அவனது விழிகள் அந்தரங்கம் பேசின. அவள் பிணங்கினுள். “நாளைக்கு உன் கழுத்திலே தாலி கட்டப்போறவன் தானே?. சரின்னு சொல்லு. பொன்னரசி!...” என்று கெஞ்சின்ை. ஒப்பவில்லை. கடைசியில் பலாத்காரத்தின் பிடியில் பெண்மை கருத்தழிந்தது. காலத்தின் வளர்ச்சி யோடு, அவளுள் கரு வளர்ந்தது. செய்தி அறிந்த அவள், செய்தியை உரியவனிடம் சேர்ப்பிக்க விரைந்தபோது, ஏச்சும் பேச்சும்தான் கிடைத்தன, “நீ துப்புக்கெட்ட கள்ளி ! உன்னை கான கண்ணுலம் பண்ணிக்குவேன்?... முடியாது!’ என்று தீர்ப்பு வழங்கின்ை கந்தசாமி. அடுத்த நாள் இரவிலே அவனே மயக்கிப் பொய் நாடகம் ஆடி, பழி தீர்த்துக்கொள்ள காட்டேரியாக மாறி, வெறிகொண்டு கரிய கத்திகொண்டு. சென்றபோது, அவன் கடல்கடந்த தகவல் கிடைத்தது. -

‘கடத்தை கெட்டவள்னு அவப்பேர் எடுத்த பின்னுலே இனிமே நான் இந்த ஊர் நாட்டிலே தங்கவே மாட்டேன் !’ என்று முடிவெடுத்து, பிறந்த வீடு துறந்து, இரவோடு இரவாக கால்போன திசைக்குச் சென்றாள் பொன்னரசி, மறுதினம் பிற்பகல் பொழுதிற்கு அவள் புதுக்கோட்டை யைத் தரிசித்தாள் ; அணிந்திருந்த நகைகள் தரிசனம் தந்தன . சுமந்திருந்த கரு அவளைச் சித்திரவதை செய்தது. ‘சி ! சனியன்!” என்று ஆத்திரப்பட்டாள், உருத்தெரியாக் கருமீது அண்டிய இடம் அடைக்கலம் தந்தது. ஏழைக் ஒருத்தி கிழல் தந்தாள். பொன்னும் மணியும் படி அாேந்தன. ஓரிரவு, கருவைக் கரைக்க விஷப் பச்சிலேயைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/219&oldid=684390" இலிருந்து மீள்விக்கப்பட்டது