பூவை. எஸ். ஆறுமுகம் 219
பொன்னரசி தயாரித்தபோது, அவ்விஷயம் அம்பலமானது. கிழவி தடுத்துவிட்டாள். “நீ யோசிக்காம கடந்ததுக்கு அது என்ன செய்யும், பாவம்’ என்றாள்.
பொன்னரசிக்குப் பே று க | ல ம் நெருங்கியபோது ஆதரவு கொடுத்துவந்த கிழவியும் கமனுலகு ஏகினுள்.
6. காளி
பொன்னரசியின் வாழ்க்கைப் பாதையில், மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. கிழவியிடம் ‘கடந்த கதை'யை இதயம் திறந்து சொன்னதுபோல வேறொரு பங்களாவில் கூறிய சமயம், அவள் அடித்துத் துரத்தப்பட்டாள். காலங்கடந்த இரவு வேளையிலே நகர்ப்பகுதியைக் கடக்க இட ததில் இருந்த சத்திரத்தில் ஒண்டினுள். வலி எடுத்தது. புதுக் கோட்டை அம்மன்காசுகூட அவளிடம் ஒட்டியிருக்க வில்லை மெல்ல எழுந்தாள். ஆங்தையின் குரலே அடை யாளமாக்கி கை முடிச்சுடன் நடந்தாள்; கடக்க முடியாமல் நடந்தாள். காடு தென்பட்டது. சுருண்டு விழுந்தாள். கும்மிருட்டு. அவள் திரும்பக் கண்மலர்ந்தாள். குவா என்னும் மொழி கேட்டது. எஞ்சியிருந்த தெம்பைக் கடட்டினுள். பச்சை மண்ணேக் கையிலெடுத்தாள். ஆண் சிசு சேணியன் ! என்று வாய்விட்டுக் கூறியவண்ணம் அதன் கழுத்தை நெறிக்கப் பிரயத்தனம் செய்தபோது, யாரோ நடந்துவரும் அரவம் கேட்டது. குழந்தையைத் தரையில் போட்டாள். ஒளிகாட்டத் தொடங்கியபின் நிலவில் அவள் நோக்கு மண்ணுக்கு ஓடியது; பச்சை ரத்தத்தின் நெற்றியிலிருந்து குருதி வழிந்து, பூமியைச் செந்நிறப்படுத்தியிருந்த பயங்கரக் காட்சிதான் அவள் பார்வைக்கு இலக்கானது. ரத்த பூமி மீது கிடந்த பச்சைப் பாலகனே ஏறெடுத்துப் பார்க்க முற்ப்ட்டாள்: வழிப்போக்கர் களின் காலடிச் சத்தம் அருகில் க்ேட்டது. பொன்னரசி சற்றுத் தொலைவில் இருந்த புதர்ப்பக்கமாக மறைந்து, தன் அவலகிலேயைச் செம்மைப்படுத்திக்கொண்டு, வந்தவர் கள் போனதும், மறுபடியும் பழைய செம்மண் பூமிக்குத் தள்ளாடித் தள்ளாடி கடந்து சென்றாள், குழந்தை காட்சி