30 மஞேரஞ்சிதம்
வாணி விலாசத்திற்கு வந்து தான், முகத்தில் புது வெள்ளமாகப் பெருகிய வியர்வையை துடைத்துக்கொண் டான் முகுந்தன்.
“வாணி! வாணி!”
“இதோ வந்திட்டேன், அத்தான்!”
‘கெடிலாக்'கின் பின் ஆசனத்திலிருந்து எழுந்து, கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் வாணி!
உலகம் பொல்லாதது!
காதல் பொல்லாதது!
‘காதல்’ என்றால் என்ன அர்த்தமாம்?
‘காதலைத் தொடங்கும்போது ஒருவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிருன்-முடிக்கும்போது மற்றவர்களை ஏமாற்றுகிருன். இதைத்தான் உலகம் காதல் என்று பெய ரிட்டு அழைக்கிறது!’
புரட்டு! -
“...காதல் என்பது ஒரு ரப்பர் பலூன், காற்றை கிரப்ப கிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும். ஆளுல் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சய
f&!.”
நிஜம்தாளு?
‘காதல் சோம்பேறிகளின் தொழில். சுறுசுறுப்பு மிக்க வர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்.”
வாஸ்தவக்தானு ?
‘காதலர் இருவர் பரிபூர்ணமாக அறிந்தபின், இருவர் ஆத்மாவும் அறிவும் உடலும் ஒன்றுகலந்து மலர்வதுதான் இலட்சியக் காதல். அத்தகைய காதல் துன்பத்திலும் இன் பத்திலும் கோயிலும் தேகாரோக்கியத்திலும், உலகின் எந்தத் தாக்குதல்களாலும் இன பிரியாதது'