இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
o - முனனுரை
பூவையின் கதைகள் எனும் மகுடமிட்டு வந்த கதைத் தொகுப்பைத் தொடர்ந்து வருவது இந்த வேனில் விழா’ என்கிற கதைக்கொத்து. புத்தகத் தலைப்பில் மணம் கமழ்கிறதல்லவா? அவ்வாறே, உள்ளடக்கம் கொண்டுள்ள கதைகளி லும் இலக்கிய மணம் கமழும். ‘ தமிழன்னைக்கு அணிவித்த ஒரு புதிய அணி “ என்று அக் கதை இணைப்பிற்கு அறிஞர் தி. ஜ. ர. அணிந்துரை வழங் கினர். தத்துவச் செம்மல் எம். வி. வி. இதற்கெனச் சில வரிகளை எழுதுகிறார்,
அப்பர் பணி பாடல் பெற்றது.
நல்ல இலக்கியம் வளர கைகொடுத்து, தோள் நல்கி, மணம் மிக்க மனம் ஈந்துவரும் தமிழ்ப் பெரு மக்கள் அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியும் இதயபூர்வமான வணக்கமும் உரியவை.
II—11—64. பூவை எஸ். ஆறுமுகம்.