பக்கம்:வேனில் விழா.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சாவிலே வாழ்வு

போயிட்டுத்தான் இப்ப வாறேன். மச்சான் சாவுக்கப்புறம், இனிமேப் புதுசா என்னுலே வாழ்க்கை தொவக்க ஏலாது. அவரு கைதொட்டுக் கட்டின தாலியைத் தவிர இனி. வேறே யாரும் என் கழுத்திலே மஞ்சள் கயிறு முடியச் சம்மதிக்கமாட்டேன். எம்மேலே ஆணை. இது...’ என்றாள் வள்ளி. அவள் பெண்! அவள் அவன் மனைவி!

சின்னயா ஆணியால் அறையப்பட்டவகை கின்றான். வள்ளியின் அழுகை வளர்ந்தது.

“தங்கச்சி, என்னை மன்னிப்பியா? உன்னை இப்ப அகியாயமா மாரி தள்ளி வச்சிட்டானே என்கிற ஆத்திரத் திலே, அவன் மேலே பழிவாங்க கான் அவன் அடிச்சுப் போட ஆட்களை ஏவிப் போட்டேன். ஆன இப்படி அவன் உசிருக்கு ஆபத்து வருமின்னு துளியும் தெரியாது. ஐயேர், தங்கச்சி...” என்று கூறிய தன் தமையனின் வார்த்தை களைக் கேட்ட வள்ளி, அப்படியே தலைசுற்றித் தட்டுக் கெட்டுத்தரையில் விழுந்தாள்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/53&oldid=684435" இலிருந்து மீள்விக்கப்பட்டது