பூவை எஸ். ஆறுமுகம் 63.
திற்குச் சிறிது சாக்தி பிறக்குமே என எண்ணி, அங்கு
சனருன.
அப்பொழுது இருள் லேசாகப் ப. ர ஆரம்பித்தது. கொங்கும் நுரையுமாக ஆரோகணித்துச் சென்று கொண்டி ருந்த காவிரியின் அழகிலே லயித்திருந்த கந்தன், இடுப்பில் செருகியிருந்த குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான். குழலின் இன் பகீதம் இளங்காற்றில் மிதந்து சென்றது. அலேபுரண் டோடும் வெள்ளத்தின் இனிய சலசலப்பு அச்சமயம் அவன் எழுப்பிய உயிர் நாதத்திற்கு சுருதி கூட்டுவது போலி ருந்தது. திடீரென அவனது குழலிசை தடைப்பட்டது. நீரின் சலசலப்புக் கேட்டுத் திரும்பினன். அந்த இருட்டு வேளையில் நீரினுள் இறங்கும் உருவம் ஒன்றின் நிழல் தென் பட்டது. விசித்தெழுந்து ஓடிச்சென்றான். நீரில் இறங்கிய உருவம் அப்போது தோன்றி மறைந்த மின்னொளியில் நன்கு தெரிந்ததும் அப்படியே அவன் பிரமித்து விட்டான்.
தன் உயிரைப் பணயம் வைத்து ஒற்றைச்சாண் வயிற் றைக் கழுவி மூட, உச்சாணிக் கம்பில் ஏறி வேடிக்கை செய்து முடித்த பின்னர் அன்று தனக்கு இரண்டணு மனமு வந்தளித்த அதே உருவம்; அவளும் பார்த்தாள். அவள் பார்வையிலே துடிப்பின் வேகம் அதிகரித்தது. அவளும் அவனை யாரென்று அறிந்து கொண்டாள் என்பது அவளது முகபாவனையிலிருந்து தெரிந்தது.
‘இவ்வளவு கும்பிருட்டிலே ஒண்டியாக அலை பாய்க்து ஓடும் ஆற்றிலே இறங்கவேண்டிய காரணம் ?-அவன் யோசனை செய்தான். -
‘ஐயா, இன்னும் ஒரு கண் சிமிட்டுற காழி களிச்சு நீங்க வந்திருந்தீங்கண்ணு. எம்மனசு எம்பிட்டு குளுக்து போயிருக்கும் ?”
அவ்விதம் சாரமற்றுப் பேசும் அப்பெண்ணினது வார்த் தைகள் அவனுக்கு வியப்பைக் கொடுத்தன.
“அப்படியென்ன ஒனக்கு அதுக்குள்ளே உசிருமேலே அம்பிட்டு வெறுப்பும் சங்கடமும் வந்திடுச்சு.'