4 தனிக்காட்டு ராணி
தான் பூரணி அடங்கும். கரும்புத் துண்டுகள், தேங்காய் மூடிகள் குலுங்கிய அதன் கழுத்திடை சாயவேட்டி, பரிசுப் பணம் ரூபாய் நூறு எல்லாம் அழகுடன் திகழ்ந்தன. வர்ணம் பூசப்பட்ட் கொம்புகள் இரண்டும், இளம் வெய்யி
லில் ஒளி உமிழ்ந்து மின்னின.
பறை. தம்பட்டம் முழங்கின. மஞ்சிவிரட்டுக்கான தீபாராதன கடந்தது. சூழகின்ற மாட்டுக் கும்பலுக்கு கடு வில் தீ கொழுந்துவிட்டெரிந்தது.
தலை நிமிர்ந்தேன்.
ஒரு பக்கம் தலையில் கட்டிய முண்டாசுடன் ஒப்பிலா மணி மாட்டைப் பிடிக்கக் கண்ணில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருந்தான்.
எதிர்ப் பக்கத்தில், சேலேயை இழுத்துக் கட்டிக் கொண்டு சுபத்திரை பூரணியை பிடித்து வெற்றிகாட்டக் கருத்துடன் கின்று கொண்டிருந்தாள்.
அருகருகே மஞ்சிவிரட்டில் முன்னர் பரிசுபெற்றவர்க ளான ஆவணத்தான் கோட்டை ஆனந்தன், சிலட்டுர் சின் னேயா, அறந்தாங்கி அருணசலம், பூவத்தக்கடி பூபாலன் எல்லோரும் பூரணியின் மேல் பதித்த கழுகுப்பார்வையுடன்
தயாராக கின்றார்கள்.
அந்த ஒரு கணத்தில் மைதானம் அமளி துமளிப்பட் டது. மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.
கங்காணியின் பூரணிக் காளை சிங்கம்போல “ஜம் ஜம்’ என்று பறந்தது. பரிசில் காட்டம் கொண்டவர்கள் ப்றக் தார்கள். சபதமும், ஆனையும் பரிமாறிக்கொண்ட ஒப்பிலா மணியும் சுபத்திரையும் பூரணியைத் தொடாங்தார்கள்.
கான் ஓடினேன். என் கடமை ஓடியது.
ஒப்பிலாமணிக்கு வேண்டிய ஆடவர்கள், ‘பலே ஒப்பி லாமணி...ம்...அவ்வளவுதான் கெலிப்பு உனக்கேதான்... ஓடு...” என்று உற்சகத்துடன் கூக்குரல் இட்டார்கள். சுபத்திரைக்கு வேண்டிய பெண்டிர் குழாம் அவளுக்குத்