பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 123

"முகதரிசனத்துல முக்கால் ஆசை போயிடுமாம். எனக்கு நீரு ராத்திரில முழு ஆசையோட வரணுங்கற ஆசை”

அன்னவடிவு, நாணத்தால் தலைகவிழ்ந்தபோது, வேலு பொய்க் கோபத்தோடு, தலைநிமிர்ந்து, "ஒன்னை நான் ஏங்க வைச்சு வேடிக்கை பார்க்கேனா இல்லியான்னு பாரு, அய்யாவுக்காக நீ ஏங்கனும், அப்போ கூட அசைய மாட்டேன். பார்க்கலாமா?" என்றான். அவன் நிஜமாகவே கோபப்படுகிறான் என்று நினைத்து அவள் "சரி ஒண்ணே ஒண்ணு கொடுத்துத் தொலையும்" என்றாள். அவன், அதற்காகத் தன்னை ஆயத்தம் செய்யப்போனபோது மேஸ்திரி, "எதைத் தொலைக்கப் போlங்க" என்று சொல்லிவிட்டு, பிறகு "என்ன வேலு, ஒன்னை வீட்ல வந்து வெத்லபாக்கு வச்சுக் கூப்பிட்டால் தான் வருவியா?" என்றார்.

வேலுவும் "கூப்பிடுநீரோ இல்லியோ, வெத்லபாக்குத் தாரும். அதையாவது ருசிபார்க்கலாம்" என்று அன்னவடிவை நோக்கி, கண்களால் சிமிட்டிப் பார்த்துக் கொண்டே, மேஸ்திரிக்குப் பதிலளித்தான். அன்னவடிவு நாணப்பட்டாள். கண்களை கைகளால் மூடிமூடித் திறந்தாள். இரவின் வருகைக்காக ஏங்கி, பகலை வேகமாகக் கழிக்க விரும்புகிறவள் போல பாண்டுக் கூடையுடன் வெளியே வந்தாள்.

கடப்பாரை ஏந்திய வேலுவும், பாண்டுக் கூடை சுமந்த அன்னவடிவும் கேடயமும் ஈட்டியுமாக நடந்தார்கள்.

6

முன்பு எந்த இடத்தில் வேலை பார்த்தாளோ, அங்கேதான் அன்னவடிவு வேலை பார்த்தாள். வேலுவுக்கும் அங்கேயே வேலை.

அது ஒரு ஆஸ்பத்திரிக்கான கட்டிடம். இக்கட்டிடம் துவங்கிய நாளில் இருந்து, உச்சியில் இருந்து இரண்டு பேர் விழுந்து, இப்பொழுது இன்னொரு ஆஸ்பத்திரியில் தாயம்மா மாதிரியே கவனிக்க எந்த டாக்டரும் இல்லாமல் துள்ளத்துடிக்கக் கிடக்கிறார்களாம். அரசுத்துறை ஒன்றிடம் இருந்து லோவஸ்ட் கொட்டேஷனில் காண்டிராக்ட் வாங்கிய 'மூர்த்தி அண்ட் மூர்த்தி கன்ஸ்டிரக்ஷன் லிமிடெட்டின் உரிமையாளர் நாயகமும் ஒரு லோவஸ்ட் பேர்வழி என்று பேசிக் கொள்கிறார்கள். முன்பு இவர் அரசாங்கத்திற்குக் கட்டிக் கொடுத்த ஒரு கட்டிடம் விழப் போனதாம். பி.டபிள்யு.டி என்ஜினியர்கள் அதை முட்டுக் கொடுத்துத் தாங்கிக் கொண்டார்களாம்.