பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 வேலைக்காரி வே: ஒரு அதிசயமுங்க! நம்ம வீட்டிலே ஒரு வேலைக் காரி ஒருத்தி இருந்தாள். என்ன, உங்க மகளை ஒரு வேலைக் காரிக்குச் சமமாகச் சொல்கிறேன் என்று வருத்தமா... பாலு: அப்படி ஒன்றுமில்லே..உம்... வே: இல்லை. இது நிஜம்தான். அமிர்தத்துக்கு ஒரு படாடோப ஆடையும், சுகிர்தத்துக்கு ஒரு பட்டிக்காட்டு ஆடையும் அணிந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாள். ஒருவேளை, பையனுக்கு இஷ்டம் இருந்தாலும் இருக்கும். பாலு: சந்தேகம் என்ன, அதோ பாருங்க [மூர்த்தியும் சுகிர்தமும் தனித்துப் பேசுவதைச் சுட்டிக் காண்பிக்கிறார்.] மூர்த்தி: பேதைப் பெண்ணே! வண்டு மனம் கொண்ட வன் அல்ல நான். என் உயிரைக் காத்த உத்தமரின் ஆலோ சனை, புத்திமதி, கட்டுப்பாடே இதற்குக் காரணம். சுகிர்: ஓ, அப்படியா! உங்கள் உள்ளத்தில் ஒரு அமிர் தம் குடி கொண்டிருந்த இடம்; அங்கே எனக்கும் அளித்தால் நெருக்கடிதானே ஏற்படும்? இடம் மூர்த்தி: சுகிர்தம்! நீ அறியமாட்டாய், என் ஆவித் துடிப்பை. அது ஏனோ தெரியவில்லை. அது உன்னைக் கண்டதுமே என் உள்ளத்தில் உனக்குத் தானகவே இடம் ஏற்பட்டுவிட்டது. சுகிர்: அப்படியானால் என்னைக் கண்டதுமே அமிர் தத்தின் நினைவு மறந்துவிட்டது. அப்படித்தானே? மூர்த்தி: இல்லை, இல்லை! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் அமிர்தத்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது. சுகிர்: எப்படி இருப்பாள் அந்த அமிர்தம்?