பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 வேலைக்காரி வே: இந்த டிரஸ்க்கெல்லாம் வேண்டிய பணம்? சர: சங்கத்திலே வாங்கிப் போடுறேனப்பா! வே: ஆமம்மா! சொக்கா, எவ்வளவு பில் ஆவுது பணம்.. சொ: அது இருக்குங்க... 300 ரூபாய்க்கு மேலே... வே: அதென்னடா.... மேலேயும் கீழேயும்? கரைக்டா சொல்லுடா கழுதை! சொ: 300 ரூபாயும், 34 அணாவும் ஆகுதுங்க! வே: அதை வாங்கிக் கொடுத்துவிடம்மா சங்கத்திலே! சர: ஆகட்டுமப்பா? வே: சரசா! காப்பிச் செலவு, வண்டிச் செலவு, அது இதுன்னுகூட ஆகியிருக்கும். எல்லாம் சேர்த்து 400 ரூபாவா...வாங்கிக் கொடுத்துவிடு. சர. சொ சர சரியப்பா! அப்படியே...வாங்கிடறேன்பா! அம்மா! இன்றைக்குக் கிடைக்கிறது சந்தேகம் என்று அந்த தையற்காரன் இழுத்தாற்போல சொன் னான். அதனாலே அவனுக்கு ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து தனியாகக் கவனிச்சேன்...அதையும் பதினைந்தா வாங்கிக்கொள் சொக்கா! (சரசா போகிறாள்.] வே: சொக்கா! வந்துதாடா புத்தி? கொ வே! எனனாங்க? வந்துதாடா புத்தி என்று கேட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்க்கிறேனே, அதைப்பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கரை இருக்காடா? கொ: டண விஷயமுன்னா...நான் லேசிலே விடறதில்லீங்க.