பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி ஒரு பெண்: 19 தோழியர்களே! தோழர்களே! எங்கள் மாதர் சங்கத்திற்குத் தேவையாய் இருந்த நிதிக்காக ஸ்ரீமதி சரசாதேவி நடத்திய நாடகம் மூலமாகக் கிடைத்த ரூபாய் 4,400-யும் அவர்கள் எங்களுக்குத் தந்தார்கள். இந்தப் பேருதவிக்காக சரசா அம்மை யாரை வாழ்த்துகிறது இச் சங்கம். (கரகோஷம்) சரசா: தாய்மார்களே! சகோ தரிகளே! பெண்களின் விடுதலைக்காக நான் எப்பொழுதும் பாடுபடுவேன். நாம் எல்லோரும் சமம். எல்லோரும் ஒன்று என்ற முறைப்படி தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைத் தகுந்த நிலையில் உயர்த்துவதற்கு நான் எப்பொழு தும் தொண்டு செய்வேன். வந்தனம். (போகிறாள்) காடசி-9. சரசா: இடம்: வேதாசலம் வீடு. இருப்: சரசா, அமிர்தம், மூர்த்தி. [வீட்டில் அமிர்தம் சரசாவின் சேலையை மடித்து அழகு பார்த்துக்கொண்டிருக்கி றாள். சரசா வருகிறாள்.) வேண்டியதானடி. இதுக்குத்தான் சேலையை மடித்து வைக்க இவ்வளவு நேரமா? அம்மாளுக்குப் பேஷனில்லே கேட்குது. ஏண்டி! உன் உடம்பில் இருக்கிற அழுக்குப்பட்டால் என்னத்துக்கடி ஆகும் சேலை. மூர்த்தி: சரசா! மூர்த்தி வருகிறான்.) எப்போது பார்த்தாலும் அமாதத்தை மிரட்டுவதே உனக்கு வேலையாய்ப் போய்வீட்டது....