பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 வேலைக்காரி சரசா: இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியை மிரட்டுவதற்குக் கூட அதிகாரம் இல்லையா? மூர்த்தி: அம்மா, பராசக்தி! நீ மிரட்டு, அதிகாரம் பண்ணு, வாய் வலிக்கத் திட்டு. நீ எஜமானியம்மா- பாவம், அவள் வேலைக்காரிதானே! அதிகாரம் பண்ணலின்னா உன் அந்தஸ்து குறைந்துவிடுமே! ஊம்.. ஆரம்பி கூச்சலை. சரசா: மூர்த்தி! நீ ஒரு வேலைக்காரிக்குப் பரிந்து பேசு வதைக் கேட்டால் ஊர் சிரிப்பா சிரிக்கும். மூர்த்தி: சரசா! போதும், நிறுத்து.. அமிர்: அய்யய்யோ! என்னாலே உங்க இரண்டு பேருக் குள்ளே சண்டையா? சரசா : இந்தாடி, அமிர்தம் இதைக் கண்ணாடிபோல் பாலீஷ் செய்யணும். (செருப்பைத் தூக்கி எறிகிறாள்) வந்து சரசாவை அடக்கப் போறானோ, தெரியவை! திமிர், பணத் திமிர்! மூர்த்தி: எப்படிப்பட்டவன் காட்சி-10. இடம்: ஆனந்தன் வீடு, காளி கோயில். இருப்: ஆனந்தன், மணி (ஆனந்தன் கத்தியைத் தீட்டிக்கொண்டிருக் கிறான். அப்போது மணி வருகிறான். ஆனந்: ஒரே வெட்டு.. வேதாசலத்தினுடைய தலை கீழே. உருள வேண்டும். மணி: ஆனந்தா! நீ சுத்தப் பைத்தியக்காரன். கோபம் கண்ணை மறைக்கும். செய்துவிடப் போகிறாய்! ஆத்திரத்தில் எதையாவது ஆனந் : நீ யார், என்னைத் தடுக்க?