பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 21 மணி: நானும் உன்னைப்போல் ஒரு நாடோடி. உன் இனம்...நீ உலகமறியாதவன். சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்திலே சிக்கிச் சிதைந்து, நான் கற்ற பாடங்களை நீயும் கற்றிருந்தால், இந்த மாதிரி கத்தியும் கையுமாகத் திரியமாட்டாய். ஆனந்: போதும்!... மூட்டை சுமப்பவனுக்கல்லவா தெரியும் கழுத்து வலி! மணி: வலி இருக்கிறதென்று கருங்கல்லில் முட்டினால் வலி தீராது. மண்டைதான் உடையும். ஆனந்: போதும், உன் போதனை! எந்த வேதாசலத் தின் சதியால் என் தந்தை பிணமானாரோ, அந்த வேதாசலத்தின் தலை கீழே உருள வேண்டும். இரத் தம் தரையில் ஆறாக ஓடினாலன்றி என் ஆத்திரம் தீராது. கொண்டுவந்த பணத்தை வக்கீலுக்கு இறைத் தேன். கேஸே போடமுடியாதென்று சொல்லிவிட் டான். இந்த வாளே வழக்கு மன்றம்; இனி, இந்தக் கையே சட்டம்... மணி : அட, நில்லப்பா! நீ வேதாசலத்தை வஞ்சம் தீர்க்க நினைக்கின்றாய்! ஆனால் அது கத்தியால் சாதிக்க முடியாது. ஆனந்: முடியாதா? பார்! ஒரு மணி நேரம் தீட்டினேன்; கூர்முனை எப்படி இருக்கிறது பார்! மணி: கத்தியைத்தான் தீட்டினாயே ஒழிய உன் புத்தியைத தீட்டவில்லை நீ. வேதாசலத்தைக் கொன்று விடுகிறாய் என்று வைத்துக்கொள். ஆனால் இறந்து போன உன் தந்தை பிழைத்து விடுவாரா? ஊரார் உன்னைச் சும்மா விடுவார்களா? அல்லது நீ ஒரு நல்ல காரியத்தைச் செய்துவிட்டாய் என்று போலீஸ்காரர்கள் உனக்கு மெடல் கொடுப்பார்களா? ஆனந்தா! வேண்டாம், இந்த விபரீத புத்தி. ஆனந்: மணி, தர்ம உபதேசம் செய்கிறாயா?