பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 முத்தாயி. இந்தாங்க காப்பி... முரு: சாப்பிடுங்க... வேலைக்காரி மா. தம்பி அதுக்கென்ன, சாப்பிட்டாப் போகுது (காப்பி கொட்டி விடுது) முரு: ஏ, புள்ளே! இப்படித்தான் காப்பியை கொதிக் கக் கொதிக்க கொண்டு வர்ரதோ? (கோபமாக) மா. தம்பி: பரவாயில்லை; விடுங்க... கொஞ்சம் பெண்ணைக் கூப்பிடுங்க.. பார்க்கலாம்... முரு: அமிரதம். அமிர்தம் முத்தாயி: அது ரொம்ப கூச்சப்படுதுங்க. மூலையை விட்டுக் கிளம்பமாட்டேங்குது... முரு: சிறுசுதானே! எல்லாம் போகப் போக சரியாப் போய்விடும். முத்தாயி! நீ சாப்பாட்டுக்கு வேண்டிய நெல் லாம் கவனி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன் மா. தம்பி: பாக்கியம்! நானும் வெளியே போயிட்டு வர்ராப்போல வர்ரேன்; நீயும் பெண்ணைக் கூப்பிட்டு, பார்க்கிறாப்போல பாரு. அது நல்ல லட்சணமா? குணமா? மணமா?... கண்ணு மா.த: ஆகட்டும் அண்ணேன்... அமிர்தம்! அமிர்தம் வாம்மா. அவுங்க வேறு யாருமில்வே... கூச்சப் படாதே! வாம்மா வா. அடேயப்பா! இவ்வளவு கூச்சமா? என்னிக்கு இருந்தாலும் நீ நம்ப வீட்டிலே வாழப் போகிற வள்தானே...வாம்மா (முகத்தில் மூடியிருந்த துணியை எடுத்துக் கொண்டு) அடப்பாவி, இதைக் காட்டத்தானா இந்த மனுசன் மறந்து வந்தான்! கண்ணைப் பாரு, கோழி முட்டைக் கண்ணு; கோடாலி பல்லு. இதைக் காட்டத் தானா இவ்வளவு பசப்பு? முத்தாயி: என்னம்மா இங்கே சத்தம்? எங்கே புறப் பட்டுட்டே? மா.த. வந்த வேலை ஒரு வகையாய் முடிஞ்சிருச்சு. போறேன். பொண்ணு காட்ட வந்துட்டாங்களாம் பொண்ணை நீயே பொண்ணு. உன் விடியா வெச்சிக்கோ. மூஞ்சி