பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி: அமிர்தம்! பலித்ததா நான் சொன்ன யோசனை? அமிர்: ஓ' ஒரே நிமிஷத்தில் ஏச்சிப்பிட்டேன் அவர்களை... மூர்த்தி: அமிர்தம்! நான் உனக்கு இவ்வளவு உதவி செய்தேனே; நீ எனக்கென்ன தரப்போறே? அமிர்: நீங்க பெரிய இடத்துப் பிள்ளை; நான் உங்க வீட்டு வேலைக்காரி; என்னாலே உங்களுக்கு என்ன தர முடியும்? மூர்த்தி: அமிர்தம்' நான் ஒன்று கேட்கிறேன்... கோவிசுக்கிடாமே பதில் சொல்றியா? உனக்கு இங்கே யாரு மேலாவது ஆசை இருக்கா? அமிர் எல்லோர் மேலேயுந்தான ஆசையிருக்கு. மூர்த்தி அதைக் கேட்கல்லே அமிர்தம். உன் மனதிலே யார் மேலாவது ஆசையிருக்கா என்று கேட்டேன். அமிர் மனதிலே கூத்தாடும் பதினாயிரம் எண்ணங்கள். மூர்த்தி அமிர்தம்! நீ குடத்தைத் தூக்கிக்கிட்டு வளைந்து வளைந்து நடப்பாயே, அது மாதிரி வளைந்து வளைந்து பேசுறே! அமிர். பாரத்தைச் சுமக்க முடியாமல்தான் அப்படி நடக்கிறேன். அதேபோல, நெஞ்சிலேயும் பாரம் இருந்தா நாக்கு வளையத்தானே செய்யும் மூர்த்தி: என்னை ஒரு சுமைதாங்கியென்று நினைச்சுக்கிட்டாவது உன் மனதிலே இருக்கிற பாரத்தை என்னிடம் சொல்லப்படாதோ? {சரசா வருகிறாள்] சரசா: ஏண்டி, அமிர்தம்! இன்னிக்குக் காலையிலிருந்து என்ன வேலையைத்தான் செய்திருக்கிறாய்?... மூர்த்தி! பூ-154-வே-2