பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 வேலைக்காரி வே: காளி! மகமாயி! லோகமாதா! சொக்: நீங்க ஜமீன்தார் ஆனதுக்கு மரியாதை செய்ய வந்திருக்காங்க... வே: தெரியுது...உங்க ஜமீன என மேலே விழுமென்று நினைக்கவே இல்லை. அந்தப் பாவி, உங்க பழைய எஜ மான் வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாம இதைக் கட்டிவிட்டுப் போனான் என் தலையிலே... கும்பலில் ஒருவன்: இந்த ஜமீன் அவர் கைவிட்டுப் போனது காளியாத்தா புண்ணியம் என்று ஊராரெல்லாம் ஒரே சந்தோஷப்படுறாங்க. வே: நானும் அதற்காகத்தான் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால் ஒன்று. நீங்க அவன் தலையில் மிளகாய் அரைச்ச மாதிரி என்கிட்டே நடந் துக்கிடாதிங்க. . சொ: ஆமா! அப்படி ஏதாவது நடந்தீங்க.அப்புறம் எஜமான் ஆளே மாறிப் போய்விடுவார். ஜாக்கிரதை வே: சீ, கழுதை! வாயை மூடு! நான் கொஞ்சம் கண் டிப்பான பேர்வழிதான் ஏன்னா, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்.. ஒருவன்: நாங்க அப்படி தப்பு தண்டாக்களுக்குப் போக மாட்டோமுங்க எஜமான் அப்படி கொஞ்சம் ஜமீன் பக்கம் வரணும என்று எங்களுக்கெல்லாம் ஒரே ஆசைய இருக் குங்க! வே: அதுக்கென்ன, போகாம இருக்க முடியுமா? எல் லோருமா சேர்ந்து கோவிலுக்குப் போய் அபிஷேகத்தை முடிச்சுகிட்டு, அப்புறம் ஜமீனுக்குப் போகலாம். ஜனங்கள்: சரிங்க.