பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 41 பங்களைக் கெடுத்தான்? ஒரு பாவமும் அறியாத என் தகப் பனைக் கொன்றான் பாவி. அவனுக்கு நீ எப்படி அருள் புரிந்தாய்? அதற்கு எப்படி உன் மனம் இடம் கொடுத்தது? தாயே! இதோ, பார் என்னை? ஏழையைப் பார்! உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன என்னைப் பார்! உன்னையன்றி வேறு கதியில்லை என்று நம்பி மோசம் போன என்னைப்பார்! நான் என்ன செய்தேன் உனக்குக் கேடு? ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே உன்னை, அதில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடாதா இந்த ஏழை படும் அவதியை! உன்னை பக்தியோடு பூஜித்தால் பலன உண்டு என்று சொன்னார்களே. நான் பூஜித்து கண்ட பலன் என்ன? எவன் என் குடும்பத்தைக் கெடுத்தானோ. அவனை ரக்ஷித்தாய் நீ. என் கால் வலிக்க உல கோயிலைச் சுற்றினேன். என் வாய் வலிக்க உன் நாமத்தை பூஜித்தேன். மாதாவே, மாகாளி, மகேஸ்வரி, லோகநாயகி என்று உன்னை பக்தியோடு வேண்டினேன். வாழ வகையின்றி திகைத்தேன். கடன்பட்டேன். கல்லுடைத்தேன். மூட்டை சுமந்தேன். வண்டி இழுத்தேன். நான் பாடுபட்ட பணத்தை என் சுக வாழ்விற்கா செலவிட்டேன்? இல்லை! சூடம வாங்கினேன்; மாலையிட்டேன்; உனக்குப் படையல் படைத்தேன். என் பக்தியில் என்ன தவறு கண்டாய் சொல்! சகலருக்கும் தாய்தானே? ஏன் உனக்கு இந்த ஓர வஞ்சனை! என்னைப் போன்ற ஏழைகளை ஏன் இப்படித் துடிக்கச் செய்கிறாய்? ஏன் பலகோடி மக்களை பதைபதைக்கச் செய்து சிலரை மட்டும் சீராக்கி வைக்கிறாய்? கள்ளங் கபடமற்றவர்களை அனலில் புழுபோல் துடிக்கவைத்து சூது, வஞ்சனை, சதி செய்யும் சண்டாளர்களை ஏன விட்டு வைக்கிறாய்? (கால் தடுமாற்றம்) மாலை! உனக்கு மலர்மாலை பாதகன் அளித்த பல வகையான பழங்கள்! அக்கிரமக்காரன் அளித்த பரிசு. வகை வகையான டைப்பு, வஞ்சகன் கொடுத்த நெருப்பு, என் னைப் போன்ற ஏழைகள் உன் பக்கத்தில் வருவதைத் தடுக்கும் பரம ஈத்ருக்கள். இதோ பார்! ஏழை அழுத கண்ணீர்! -