பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 49 பாக்: இந்த வீட்டிலேதான் மூணு வருஷமா வேலை பார்த்துக்கிட்டு வர்ரேனுங்க மணி: ஓ...ஐ.சி! உன் பெயர் என்ன? பாக் பாக்கியம்... மணி: பியூட்டிபுல் நேம் பாக்: என்னங்க! டீ பார்ட்டியிலே ஒரு டான்ஸ்... மணி: பேஷா வைப்போம்... பாக்: அதிலே ஜமீன்தாரின் மகள் சரசாளே ஆடினால் ரொம்ப நல்லாயிருக்கும். வந்து மணி அதுக்கென்ன, பிரமாதம! அப்படியே செய்து விடுவோம். பாக். அப்ப நான் போயிட்டு வரட்டுங்களா? மணி. போறியாஹூம். போறியா.. ? காட்சி-24. இடம்: வேதாசல முதலியார் வீடு இருப்: வேதாசலம், சொக்கன். [வேதாசல முதலியார் றார்.) அழைப்பிதழைப் படிக்கி வே:'ஐயா, நான் அயல்நாடு சென்று, சுகமாக திரும்பி யதை முன்னிட்டு, நிகழும கார்த்திகை மாதம் 2ஆம் தேதி சனிக்கிழமையன்று என இல்லத்தில் நடக்கும் தேனீர் விருந் துக்குத் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாய் வந்து என்னை ஆசீர்வதிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இப்ப டிக்கு, பரமானந்தன், மேவார் விலாசம். சொ: போக வேண்டியதுதானுங்களே டீ பார்ட்டிக்கு வே: சீ, கழுதை! உன்னை ஆரூடமா கேட்டேன்...