பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 53. மெலிந்து போனேன் டாக்டர்கள் நான் ஐரோப்பா செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். தாயாரை அப்போது விட்டுவிட்டுச் செனறவன், இப்போதுதான் திரும்பி இருக் கிறேன். ஆதலால் இனி என தாயாரையும்; வீட்டையும் விட் டுப் போகிறதில்லையென்று தீர்மானித்துவிட்டேன்.உங் களையெல்லாம் சந்திப்பதற்காகவே இந்த டீ பார்ட்டி ஏற் பாடு செய்தேன். அழைப்பை ஏற்று எனை கௌரவப் படுத்தியதற்காக வந்தனம். [கை தட்டல் மணி: லேடீஸ்! ஓ எக்ஸ்யூஸ் மி! தோழர்களே, ஸ்ரீமதி சரசாதேவியின் நடனத்தை நீங்கள் கண்டு களித்தீர்கள்; பார்த்து ரசித்தீர்கள் அவர்கள் இந்த டீ பார்ட்டியிலே நடன விருந்து அளிக்க வேண்டுமெனறு நான் ஆசித்தேன்; என் நண்பா மிஸ்டர் பரமானந்தன அவர்களும் அதை ஆமோதித்தார்கள். அழைப்பை ஏற்றுக் கொண்டு அம்மை யாரும் தன்னுடைய பொறுப்பைச் செய்து முடித்தார். ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இங்கு உள்ள அனைவரும் கண்டு மகிழும்படி நடத்தியும் தந்தார். அதற்காக, அவருக் கும் அவரது தோழியருக்கும் உங்கள சார்பாகவும், மிஸ் டர் பரமானந்தன சார்பாகவும் என் நன்றி. வந்தனம்... [கை தட்டல்] வே அ எபுமிக்க நண்பர்களே, பரமானந்தன் நமக்கு அளித்துள்ள டீ பார்ட்டி உண்மையிலே நமக்குப் பரமானந்த மாக இருந்தது. அது அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ -நான் அவருக்கு ஒரு விதத்திலே உறவினன். சில வருஷங் களுக்கு முன் அவர் இங்கு வந்து குடியேறினார்களே தவிர, அப்பொழுது அவர் யார் கிட்டேயும் நெருங்கிப் பழகிய தில்லை. திடீரென்று ஒருநாள கப்பலேறிவிட்டார். அதற் குப் பிறகு நான் அவருடைய தாயாரை அடிக்கடி போய்ப் பார்த்ததுண்டு அந்த அம்மா ஒருநாள் வேடிக்கையாக என் னிடம், உங்கள் மகள் சரசாவை என் மகனுக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். நானும் எல்