பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர: என் தகப்பனைக் கொன்ற பாதகனை ஒரே வெட்டில் கொலை செய்து வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தபொழுது.. மணி: அடாது. அவனை ஒரே அடியாக வெட்டிப் போட்டால் பயனில்லை. அவனை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டுமென்று சொன்னேன். நன்றாக ஞாபகமிருக்கிறது. பர: இந்த ஞாபகம் உள்ளவன இப்பொழுது அவனு டைய மருமகனாக்கிவிட்டாயே, இது என்ன நியாயம்? மணி: ஆம்! பரமானந்தன் அவனுடைய மருமகன்; ஆனந்தன் அவனுடைய பரம விரோதி. பர: போதும் இந்தப் புதிர்கள்! மணி: அவசரக்காரன் ஆனந்தா நீ! கோட்டைக்குள் புகுந்து விட்டோம். இனி எதிரிகளின் மார்புக்கு நேரே செல்லும் நம்முடைய வாள்? இதோ, படித்துப் பார்! பழி தீர்க்கும் வழி. நான் வகுத்துள்ள திட்டம். படி, முதல் பக்கத்தை! பர: அடுத்துக் கெடுக்கும் படலம். மணி: அதுதான் இப்பொழுது நடந்தது. வெறும் ஆனந்தன் வேதாசல முதலியாரை நெருங்க முடியாது. ஆனால் பரம விரோதியான பரமானந்தனை மேளதாளங்களோடு, விருந்து வைபவத்தோடு நாள் நட்சத்திரம் பார்த்து, தன்ஒரே மகளான சரசாவைக் காணிக்கையாகக் கொடுத்துத் தன் மாளிகைக்கு அழைத்துக் கொண்டார். இதற்குப் பெயர் தான் அடுத்துக் கெடுக்கும் படலம். பர: அருமையான ஏற்பாடு! எங்கே பணத்தின் மீது பாசங்கொண்டு நம் திட்டங்களையெல்லாம் விடுவாயோ என்று எண்ணினேன். மணி. பைத்தியம்.. அடுத்ததைப் படி! மறந்து