பெருமை பேசிக் கொள்கிறாரே ஸ்ரீமான் ஸ்ரீமதி சரசாவைப் பார்த்து, அதே சரசாவை, நீ சதா நேரமும் கொடுமைப் படுத்த வேண்டும். அவள் கண்கலங்கி நிற்பதைப் பார்த்து, 'கண்ணைப்போல் வளாத்தேன். இன்று கண்கலங்கி நிற்கிறாளே' என்று அவன் கதற வேண்டும். பர: மணி! இப்பொழுதுதானப்பா என் மனம் நிம்மதி அடைந்தது. மணி: 'பணம் பாழாகும் படலம்'--இதை ஆரம்பிக்க வேண்டும் இப்பொழுது. அதற்கு சரசா ஒரு கருவி. அவளை ஒரு தடவை முறைத்தால் ஓராயிரம்; ஒரு அடி அடித்தால் ஐயாயிரம்; 'ஐயோ' என்று அலறினால் பத்தாயிரம்-- இப்படிப் பறக்க வேண்டும் பணம்.
பர: பாவம், பெண்ணாயிற்றே! நாயமாகக் கேட்டால் வாங்கிக் கொடுத்துவிடுவாளே சரசா! மணி: இரக்கம் காட்டுகிறாயா? ஆனந்த்! அன்று உன் தந்தை மரக்கிளையில் தொங்கும்போது அவன் இரக்கம காட்டினானா? அந்த அரக்கனின் மகள் இவள். ஆதலால் ஒரே கல்லில் இரண்டு பழம் விழவேண்டும்; அதே சமயத்தில் பணமும் கறந்தாக வேண்டும். என்ன சொல்கிறாய்? பர: நான் தயார்! இப்பொழுதே ஆரம்பிக்கலாமா? மணி: கொஞ்சம் பொறு. இனிமேல்தான் முக்கியமான கட்டங்கள் இருக்கின்றன. அதனால்...
பர: அதனால்? மணி. இது இப்பொழுது தேவை...நீயே படித்துப் பார் பர : இடைவேளை. காட்சி- 27. இடம்: பாதை இருப்: மணி, பரமானந்தன் [மணியும் பரமானந்தனும் காரில் வருகின்றனர்.)