பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 வேலைக்காரி ர: முட்டாளே! உலகத்தில் குற்றம் செய்தவர்கள் மட்டும்தானா தண்டிக்கப்படுகிறார்கள்? அப்படியென்ன, நீ ஒரு குற்றமும் செய்ய.ாதவளா? இப்பொழுது பாடிக் கொண்டிருந்தாயே, ஓ-வருவாயா, ஆடவருவாயா என்று அது, எவனைப் பற்றியடி? யாரடி அவன்? சர: பெரிய குற்றத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள். சாமிமேல் பாட்டு படிச்சேன். பர: சாமிமேல் பாடும் பாட்டா இது! இப்படித்தான் ஆசை நாயகனைக் கூப்பிடுவதுபோல்தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறதோ? பேஷ், அதெல்லாம ஒன்றுமில்லே; நீ யாரையோ மனதிலே நினைச்சுக்கிட்டு அதைச் சாமி மேலே சாக்காகப் போட்டு பாடியிருக்கிறே. உண்மையைச் சொல்லி விடு. சர: கடவுளே! ஒரு புருஷன் தன் மனைவியிடம் பேசும் பேச்சா இது? என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும்? கல்யாணம் செய்துகொண்டு நான் கண்.. பலன என்ன? பர என்னடி.. மயான காண்டம் நடத்திக் காண்பிக் கறே, எவனைப் பற்றி பாடிக்கிட்டு இருந்தே (பரமானந்தன் சரசாவை அடிக்கிறான். சரசா அலறுகிறாள். வேதாசல முதலியார் வருகிறார்? சர. ஐயோ! அப்பா..அப்பா.. பர: அங்கே ஏண்டி போறே? இங்கே வாடி வே: என்ன அக்கிரமம் மாப்பிள்ளை இது? பர: என்ன மாமா சொல்றீங்க! வே: டேய், பரமானந்தா! உத்தமிகள் வயிறெரிஞ்சா வாழமாட்டான் எவனும். ஐயோ...என் திரௌபதி மாதிரி கதறுதப்பா பொண்ணு பர: திரெளபதியா இவ? ஏம்மா திரௌபதை...? வே: அட பாவி! பர: இடியம்.. இவங்களோடு மாரடிச்சி போகுது உயிர். நமக்குப்