பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'வேலைக்காரி 83 பர: இரு மணி ! என் பொண்டாட்டியை இவன் வீட்டிலே விட்டுட்டுப் போறதுக்கு நான் என்ன அவ்வளவு மானங் கெட்டவனா? ஏய், சரசா! என்னடி இளிக்கிறே? பார்த்தியா மணி! பத்தினி ஆக்ட் தத்ரூபமாய் இல்லே? இந்தாடி சரசா! உன் நகையெல்லாம் கழட்டி உங்கப்பன் முகறையிலே எறிஞ் சிட்டு என் பின்னாலே புறப்படு! சரசா: எங்கே? பர: வா என் பின்னாலே. அப்புறம் தெரியும்... சர: அப்பா! என்ன இது? என்னை எங்கே போகச் சொல்றீங்க? வே: போம்மா, உன் புருஷனோடு! ஒருவேளை, புரு ஷன் பெண்டாட்டி தனிக்குடித்தனம் பண்ணினா புத்தி வருமுன்னு சொல்லுவாங்க... சர: அப்பா! என்னை இப்படி நிற்கதியாய் விடலாமா? வே: நான் என்னம்மா செய்றது? எல்லாம் விதிப்படி நடக்கட்டும்! என்னால் ஆனவரைக்கும் சொல்லிப் பார்த் தேன். துளியாவது கேக்கறானா என் பேச்சை? ஒரே மகன்! ஒரு சொல் தாங்காமல் வீட்டை விட்டே போயிட்டான்.. மணி: அடாடா! என்ன கருணை மகன் மேலே; இவரு தாம்பா அந்தக் காலத்திலே தசரதராசாவாக இருந்தாரு.. வே: அட, சும்மா இர்ரா அனுமாரே. அம்மா! இனி மேல் இவன் இந்த வீட்டிலே இருந்தா நான் தூக்குப் போட் டுக் கொண்டுதான் சாகணும். பர: பார்த்தியா மணி! மகாகனம் பொருந்திய மாம னார் அவர்கள் மரக்கிளையில் தொங்கப் போகிறார்களாம்! மணி: மங்களகரமான ஆரம்ப தேதியை எதிர்பாருங் கள்! வே: டேய் ! இனிமே ஏதாவது பேசினீங்க உதைதான் விழும். வீட்டைவிட்டுப் போங்கடா... கழுதைகளா...!