இடம். வேதாசல முதலியார் வீடு
இருப்போர்: வேதாசல முதலியார், சொக்கன்.
வே: காளி, மகமாயி, லோகமாதா...டேய், சொக்கா! கொண்டு வாடா தாயுமானவரை. இது என்னடா பார்சல்?
சொ: இதுங்களா ... நம்ம சரசம்மா மாதர் சங்கத்திலே டான்ஸ் ஆடப்போறாங்களில்ல...
வே: கதையை வளர்க்காதேடா...விஷயத்தைச் சொல்லூ.
சொ: அதுதானுங்க...அந்த டான்ஸுக்கு உடைகள் எல்லாம் தச்சு வந்திருக்குதுங்க....
வே: இவ்வளவுமா?
சொ: இன்னமும் ஒரு பார்சல் வரவேண்டியதிருக்குங்க...
வே: இவ்வளவுக்கும் பணம்?
சொ: அதெல்லாம் நேத்திக்கே கொடுத்தாச்சுங்க.
வே: அட பாவி!... அமிர்தம்,சரசா இருக்கிறாளா? அவளைக் கூப்பிடு! காபி சாப்பிட்டாச்சுதா அவன்?
அமி; அவரையும் கூப்பிடட்டுங்களா?
வே: சீ! அதிகப் பிரசங்கி. ஒன்று சொன்னா ஒன்பது கேள்வியா? போ! போயி... சரசாவைக் கூப்பிட்டு வா.
காட்சி-2. இடம்: வேதாசல முதலியார் வீடு.
இருப்: சரசா, அமிர்தம், மூர்த்தி. [அமிர்தம் போகிறபோது, சரசா எதிரே வருகிறாள்.]