பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 99 உன்னைக் கண்ட கோலத்தை! அவர்களும் காணட்டும். (தலைப்பாகையை அவிழ்க்கிறான்; சுந்தரகோஷ் பெண் ணாகக் காட்சியளிக்கிறாள். கோர்ட்டிலே சத்தம்) ஜட்ஜ்: சைலன்ஸ்... சைலன்ஸ்! வட.வ: பாடன் மி மை லார்டு. கோர்ட்டிலே வழக்கத் திற்கும் ஒழுக்கத்திற்கும் விரோதமாக நடந்து கொண்ட தற்கு மன்னிக்கக் கோருகிறேன். இதோ, இந்தப் பரம பத்தினிதான் பாதி ராத்திரி வேளையிலே வேஷமிட்டு, ஊரை ஏய்த்த ஹரிஹரதாஸுடன் குலவிக் கொண்டி ருப்பதைக் கண்டுவிட்டான் மூர்த்தி. குருவும் சீடனும், காமுகனும் கள்ளியும் என்பதைக் கண்டான். அதன் விளைவு இக்கொலை. ஜட்ஜ்: ஆச்சரியமாக இருக்கிறது. வக்கீல் வேலையுடன் துப்பறியும் வேலையும் செய்திருக்கிறீர் வட வ: இந்த வழக்கிலே மேலும் பல மர்மங்கள் உள்ளன விளக்குவதற்கு. ஆஸ்ரமத்துக்குச் சென்று, அங்கு சில உண்மைகளைக் காண விரும்புகிறோம். கொஞ்சம் அவ காசம் வேண்டுகிறேன். ஜட்ஜ்: எஸ்... வட.வ: தேங்க்யூ மை லார்ட் காட்சி-51 இடம்: நீதிமன்றம் இருப்: வடநாட்டு வக்கீல், பப்ளிக் பிராஸி கியூட்டர், ஜட்ஜ். (கோர்ட் விசாரணை: பிற்பகுதி] வ. வ: ஆஸ்ரமத்தைக் கண்டோம். கடவுள் அரு ளுக்கு வழி காட்டப்படும் இடம் என்று பாமரர் நம்பும் அந்த இடம் காமவேள் நடனசாலையாக இருக்கக் கண்