பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 வேலைக்காரி டோம். இளித்தவாயர்களுக்குப் பகலிலே உபதேசம்; இன்ட வல்லிகளுக்கு இரவிலே சரசமாம்! குருடனுக்குக் கோல் தேவையாக இருப்பதுடோல், ஊரை ஏமாற்றிக் குடிகெடுப்ப வனுக்கு வேஷம் தேவைப்படுகிறது. வேஷமணியாத வேதாந்தி - மோடி செய்யாத மாது-ஜோடி இல்லாத மாடப் புறா- சேடி இல்லாத ராஜகுமாரி இருக்க முடியாதாம்' ஹரிஹரதாஸ் இத்தகைய ஓர் வேஷதாரி! இந்த ஆஸ்ரமத் திலே காதினிலே குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பா.., காய்ச்சிய பால் தொண்டையில் ஓட, கண்கள் கதியற்றுக் கன்னியரை நாட, கடவுள் அருளுக்கு வழிகாட்டப்பட்ட தாம்! சிரித்திடும் நரி, சிவ சொரூபத்தில் இருந்தது, இந்த ஆஸ்ரமத்தில்! 'ஓம் சாந்தி' என்று உரத்த குரலில் கூவிவந்த இந்தக் குருவைக் கரண ஒழுக்கம் கூசிற்று; தருமம், இவன் இருக்கும் திக்கைக் காண மறுத்தது. பப்ளி. பி : மை லார்ட்! நண்பர் கடிகாரம் இல்லாத இடத்திலே செய்ய வேண்டிய பிரசங்கத்தை, நண்பர் இடத்தை மறந்து இங்கே நடத்துகிறார். ஹரிஹரதாஸ் கொல்லப்பட்டது பற்றியே இப்போது வழக்கு! வட .வ : ஆம்; கொலை வழக்குதான்! ஹரிஹரதாஸ் கொல்லப்பட்டது உண்மை; அவனைக் கொன்றது மூர்த்தி என்பது மறுக்க முடியாத உண்மை. படுமோசக்காரனைக் கொல்வது பரோபகாரம் என்று ஏன் நாம் மதிக்கக் கூடாது? பாம்பைக் கொல்வது பாவமா? பப்ளி . பி : தர்ம சாஸ்திர விதிப்படி இங்கே நாம் விசா ரணை நடத்த வரவில்லை. சட்டத்தின்படி கொண்டுவரப் பட்ட ஒரு கொலை வழக்கை விசாரணை நடத்துகிறோம். வட . வ : சட்டம் தர்மத்துக்குக் கட்டுப்பட வேண்டாம் என்பது என் நண்பரின் வாதமோ? சட்டம் ஓர் இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு. ஏழையால் அந்தப் பிர காசமான விளக்கைப் பெறமுடியாது. இதோ, கோர்ட்டார் இதைப் பார்வையிடும்படி கேட்டுக் கொள்கிறேன். இது