பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பின் ஏன் ஷஇட்டிங்கைக் கான்ஸல் செய்கிறீர்க்ள?" என்று அவர்கள் குடைந்தார்கள். தர்மசங்கடமாகப் போய்விட்டது பத்மநாபனுக்கு. "வேறொன்றுமில்லை ஐயா, ஸ்பான்ஜ்' வாங்க ஸ்பென்ஸருக்குப் போக வேண்டுமாம்; அதற்காகத்தான்." என்று இழுத்தார். அதைச் சொல்லி அவர் வாய் மூடுவதற்குள், “எத்தனை டஜன் வேண்டும்? - இதோ, நான் இப்போதே போய் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்!" என்று கிளம்பினார் ஒருவர் 'உம்முடைய காரைச் சொல்லும், அடிக்கு ஆயிரம் தடவை நிற்கும் -நானே போய் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று துடித்தார் இன்னொருவர் மற்றொருவர், 'அடாடா இந்தச் சமயத்தில் 'லோகலுக்கு ஏரோப்ளேன் ஸர்விஸ்" மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் நான் அதில் பறந்தே போயிருப்பேன்!” என்றார் கைகளைத் துாக்கித் துக்கிக் காட்டி. "கடவுள் வஞ்சனைக்காரன், ஸார் காக்கைக்கும் கருடனுக்கும் கொடுத்த சிறகுகளை எனக்கு மட்டும் கொடுத்திருந்தால் ?"